News January 3, 2025

‘ஸ்க்ரப் டைபஸ்’ நோய் வந்தால் என்னென்ன நடக்கும்

image

14 நாட்களில் காய்ச்சல், நடுக்கம், உடல் சோர்வு, உடல் வழி, இரும்பல் போன்றவை ஏற்படும். 2ஆவது வாரத்தில் நுரையீரல் தொற்று, நிமோனியா மற்றும் முளைக்கு தொற்று பரவி சுவாச செயலிழப்பு, கல்லீரலில் பாதிப்பு, மஞ்சள் காமாலை, மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும். கல்லீரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகள் செயலிழந்து, மரணமடையும் வாய்ப்பு 30% வரை உள்ளது. இது பிரச்னைக்குரிய காய்ச்சல் என்பதை மக்கள் உணர வேண்டும். ஷேர் பண்ணுங்க.

Similar News

News November 20, 2025

வேலூர் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் ஒத்தி வைப்பு!

image

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை (நவ.21) நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நிர்வாக காரணங்களை முன்னிட்டு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று (நவ.20) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News November 20, 2025

வேலூர் உழவர் சந்தைகளில் 39.10 லட்சம் வர்த்தகம்!

image

வேலூர், வேலூர் டோல்கேட், காகிதப்பட்டறை, காட்பாடி, குடியாத்தம், பள்ளிகொண்டா, பேரணாம்பட்டு ஆகிய 6 உழவர் சந்தைகளில் கார்த்திகை மாத அமாவாசையொட்டி நேற்று (நவ.19) ஒரே நாளில் 93 மெட்ரிக் டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் 39 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது என உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News November 20, 2025

அடுக்கம்பாறை: நடுரோட்டில் பயணிகளை இறக்கி விட்ட அரசு பஸ்!

image

வேலூரில் இருந்து அடுக்கம்பாறை அடுத்த ஆற்காட்டான் குடிசை கிராமத்திற்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு இன்று காலை அரசு பஸ் சென்றது. அடுக்கம்பாறை சென்றதும் காலதாமதம் ஆகிவிட்டதால் பஸ்சில் இருந்த பணிகளை நடுரோட்டில் இறக்கிவிட்டு திரும்பி சென்றனர். இதனால் பஸ்சில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் கடும் அவதியடைந்தனர். இதுகுறித்து போக்கு வரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

error: Content is protected !!