News April 4, 2025

ஷவர்மா சாப்பிட்டு 20 பேருக்கு உடல்நலம் பாதிப்பு

image

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள கடையில் ஷவர்மா சாப்பிட்ட ரோஹித் (17) என்பவருக்கு உடல்நலம் பாதித்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் அளித்த புகாரின் பேரில், சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். உணவகம் சுகாதாரமற்ற நிலையில் இருந்ததால், ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், உணவகத்தில் சாப்பிட்ட 20 பேர் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. சிக்கன் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

Similar News

News November 21, 2025

சென்னை: நாட்டையே உலுக்கிய பவாரியா வழக்கில் இன்று தீர்ப்பு!

image

2005-ம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதியில் அதிமுக சார்பில் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் கே.சுதர்சனம். இவரை ஹரியானாவைச் சேர்ந்த பவாரியா கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தனர். இதனையடுத்து, ஐஜி ஜாங்கிட் தலைமையிலான தனிப்படை பவாரியா கொள்ளை கும்பலை கைது செய்தது. இந்த கொலை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று (நவ.21) தீர்ப்பு வழங்கவுள்ளது.

News November 21, 2025

சென்னை: 10th போதும், உளவுத்துறையில் வேலை!

image

சென்னை மக்களே, மத்திய உளவுத் துறையில் காலியாக உள்ள 362 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 – 25 வயதிற்குட்ப்பட்டவர்கள் நவ. 22ம் தேதி முதல் டிச. 14க்குள் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்து தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும். ரூ.18,000 – ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு <>CLICK <<>>செய்யவும். இந்த பயனுள்ள தகவலை ஷேர் செய்யுங்க

News November 21, 2025

சென்னை: பைக்கில் சென்றவர் மீது கொலைவெறி தாக்குதல்!

image

அபிராமபுரத்தைச் சேர்ந்தவர் மவுலி (23) கார் ஓட்டுநர். நேற்று காலை, பைக்கில் மந்தைவெளி ரயில் நிலையம் அருகே சென்றார்.3 பேர் அவரை வழிமறித்து, அரிவாளால் சரமாரியாக வெட்டி தப்பிச் சென்றனர். அபிராமபுரம் போலீசார், கார் ஓட்டுனர் மவுலியை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அவர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சையில் உள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!