News October 24, 2024

வைகை அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு

image

மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து அக்.16 முதல் வினாடிக்கு 800 கன அடி வீதம் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் நேற்று(அக்.23) முதல் வினாடிக்கு 100 கன அடி வீதம் அதிகரிக்கப்பட்டு தற்போது வினாடிக்கு 900 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மதுரை, தேனி, ஆண்டிபட்டி – சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 10, 2025

தேனி: கார் மோதி கணவன் – மனைவி படுகாயம்

image

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பகுதியை சோ்ந்தவா் மணிகண்டன் (37). இவர் இவரது மனைவி ஆர்த்தியுடன் (37) நேற்று முன்தினம் அவரது இரு சக்கர வாகனத்தில் தேனி நோக்கி சென்றுள்ளார். தேவதானப்பட்டி பகுதியில் சென்றபோது எதிரே வந்த காா் இவா்களது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த தம்பதியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். விபத்து குறித்து தேவதானப்பட்டி போலீஸாா் வழக்கு (டிச.9) பதிவு.

News December 10, 2025

தேனி: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

தேனி மக்களே, 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம். <>electoralsearch.eci.gov.in/<<>> என்ற இணையதளத்தில் சென்று உங்கள் தரவுகளை வீட்டிலிருந்தே சரிபார்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கபடுவதை தடுக்கலாம். SHARE.

News December 10, 2025

தேனி: பெண் தூக்கிட்டு தற்கொலை

image

இராஜதானி அருகே சுந்தரராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் நாகு (44). இவருக்கு சற்று கண் குறைபாடு உள்ள நிலையில் அவரது சகோதரியின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார். கண் குறைபாடு காரணமாக மிகுந்த மன வேதனையில் இருந்து வந்த நாகு நேற்று (டிச.9) அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து இராஜதானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!