News August 24, 2024
வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ரயில்

வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா ஆலய திருவிழா வருகின்ற ஆகஸ்ட் 29-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஆகஸ்ட் 28-ஆம் தேதி இரவு 7 மணியளவில் தாம்பரத்திலிருந்து சிறப்பு ரயில் புறப்பட்டு மயிலாடுதுறை மார்க்கமாக சென்று 29-ஆம் தேதி காலை 3.30 மணியளவில் வேளாங்கண்ணி சென்றடையும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கமாக 30-ஆம் தேதி நள்ளிரவு 12:30 மணிக்கு புறப்படும்.
Similar News
News November 16, 2025
மயிலாடுதுறையில் 163 பேர் ஆப்சென்ட்!

தமிழக முழுவதும் இன்று ஆசிரியர் தகுதி தேர்வு (தாள் – 1) நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் நான்கு தேர்வு மையங்களில் இன்று தேர்வு நடந்தது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 1295 தேர்வர்கள் தேர்வு எழுத ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் 1132 பேர் தேர்வு எழுதி உள்ளனர். 163 பேர் இன்று தேர்வு எழுத வரவில்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
News November 16, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், மயிலாடுதுறை சீர்காழி உட்கோட்டங்களில் உட்பட்ட 14 காவல் நிலையங்களுக்கும் இரவு முதல், (நவ.15) காலை 8 மணி வரை இரவு ரோந்து செல்லும் போலீசாரின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைபேசி எண்ணும் தெரிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 15, 2025
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலெர்ட்!

வங்கக் கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள காரணத்தால், தமிழத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் நாளை (நவ.16) மயிலாடுதுறை, கடலூர், நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யக்கூடும் என ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!


