News April 22, 2025

வேளாங்கண்ணியில் 9 நாள்கள் துக்கம் அனுசரிப்பு

image

போப் பிரான்சிஸ் மறைவையொட்டி வேளாங்கண்ணி பேராலயத்தில் துக்கம் அனுசரிக்கும் வகையில், அவரது வயதின் எண்ணிக்கைக்கு ஏற்ப 88 முறை பேராலய மணிகள் ஒலிக்கப்பட்டன. பேராலயத்தில் போப் பிரான்சிஸ் படம் வைக்கப்பட்டு, அஞ்சலி செலுத்தும் வகையில் படத்தைச் சுற்றி மலர்வளையம், மலர்கள் வைக்கப்பட்டிருந்தன. இதை தொடர்ந்து பேராலயத்தில் 9 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 26, 2025

நாகை மாவட்ட விவசாயிகள் கவனத்திற்கு

image

நாகை மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், இதனை விவசாயிகள் பயன்படுத்தி வயல் வரப்பு ஒரங்களில் உளுந்து சாகுபடி செய்வதன் மூலம் கூடுதல் வருமானம் பெற முடியும் என மாவட்ட வேளாண்துறை இணை இயக்குநர் கண்ணன் தெரிவித்துள்ளார். மேலும் விவசாயிகளுக்கு தேவையான உளுந்து விதைகள் மற்றும் விதைநேர்த்திக்கு தேவையான மருந்து வகைகள் வேளாண் விரிவாக்க மையங்களில் 50% மானியத்தில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 26, 2025

நாகை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

image

மகளிர் மேம்பாடு, பத்திரிகை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மகளிருக்கு, தமிழக அரசால் ஆண்டுதோறும் அவ்வையார் விருது மற்றும் ரூ.1.5 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டு வருகிறது. தகுதியுடையவர்கள் https://awards.tn.gov.in என்ற இணையத்தில் வரும் டிச.31-க்குள் விருதுக்கு விண்ணப்பித்து, அதன் நகலை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News November 26, 2025

நாகை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

image

மகளிர் மேம்பாடு, பத்திரிகை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மகளிருக்கு, தமிழக அரசால் ஆண்டுதோறும் அவ்வையார் விருது மற்றும் ரூ.1.5 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டு வருகிறது. தகுதியுடையவர்கள் https://awards.tn.gov.in என்ற இணையத்தில் வரும் டிச.31-க்குள் விருதுக்கு விண்ணப்பித்து, அதன் நகலை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!