News October 23, 2024
வேளச்சேரி ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை வேளச்சேரி ரயில் நிலையத்திற்கு, இன்று அதிகாலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வெடிகுண்டு மிரட்டலையடுத்து, வேளச்சேரி ரயில் நிலைய அதிகாரிகள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர், ரயில் நிலையத்தில் மோப்பநாயுடன் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால், ரயில் பயணிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
Similar News
News November 5, 2025
சென்னை மாவட்டத்தில் தாலுகா வாரியாக மழை நிலவரம்

சென்னை மாவட்டத்தில் நேற்று காலை 8:30 மணி முதல் இன்று காலை 6:30 வரை தாலுகா வாரியாக அயனாவரம் -13, எழும்பூர் – 10.2, கிண்டி -13.2, மயிலாப்பூர் – 8.4, பெரம்பூர் – 12.3, மாம்பலம் 0, புரசைவாக்கம் 0.2, தண்டையார்பேட்டை -1, ஆலந்தூர் -29.5, அம்பத்தூர் – 5, சோழிங்கநல்லூர் – 10.4 மி.மீ பதிவாகியுள்ளது என தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது
News November 5, 2025
சென்னை இளைஞர்களே செம வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் தொழிற்பயிற்சியில் சேர இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 12th, சான்றிதழ் படிப்பு, ஐடிஐ, பட்டப்படிப்பு, பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். வயது 18-26 வரை இருக்கலாம். மாதம் ரூ.9,600-12,300 வரை உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் இந்த <
News November 5, 2025
சென்னையில் முக்கிய தொடர்பு எண்கள்!

உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, 9445398810, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107, 9445398802, தொழிலாளர் துணை ஆணையர் – 044-25340601, 9445398695, தொழிலாளர் துறை உதவி ஆணையர் (பெண்கள் நலம்) – 9445398775, தொழிலாளர் உதவி ஆணையர் – 04425342002 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் செய்யுங்க


