News October 23, 2024
வேளச்சேரி ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை வேளச்சேரி ரயில் நிலையத்திற்கு, இன்று அதிகாலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வெடிகுண்டு மிரட்டலையடுத்து, வேளச்சேரி ரயில் நிலைய அதிகாரிகள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர், ரயில் நிலையத்தில் மோப்பநாயுடன் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால், ரயில் பயணிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
Similar News
News November 20, 2025
சென்னை மக்களே இலவச தையல் இயந்திரம் வேண்டுமா?

சென்னை மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. இங்கு <
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
33. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!
News November 20, 2025
சென்னை: தாய்பால் குடித்த பச்சிளம் குழந்தை பலி

சென்னை வளசரவாக்கம் பகுதியில் பிறந்து 2 நாட்களே ஆன பெண் பச்சிளம் குழந்தை தாய் பால் குடிக்கும் பொழுது திடிரென மூச்சு திணறல் ஏற்பட்டு உயிர் இழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை குழந்தை பசி இன்மை காரணமாக அழுத நிலையில் அவரது தாய் குழந்தைக்கு பால் அளித்த நிலையில் மூச்சு திணறல் ஏற்பட்டதால் மருத்துவமணைக்கு அழைத்து செல்லும் போதே குழந்தை உயிர் இழந்துள்ளது.
News November 20, 2025
புதிய கட்சியை தொடங்கிய மல்லை சத்யா

சென்னை அடையாறில் உள்ள முத்தமிழ் பேரவை மன்றத்தில் இன்று (நவ.20), மதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா, திராவிட வெற்றிக்கழகம் என்ற புதிய கட்சியை துவங்கியுள்ளார். மேலும், திருப்பூர் துரைசாமி கட்சிக்கொடியை அறிமுகப்படுத்தினார். கட்சியின் தலைவர் மல்லை சத்தியா, மூத்த தலைவர்கள் நாஞ்சில் சம்பத், செங்குட்டுவன் டி.ஆர்.ஆர் செங்குட்டுவன், செல்லப்பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.


