News August 9, 2024

வேலைவாய்ப்புடன் பட்டப்படிப்பு படிக்க ஆட்சியர் அழைப்பு

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி, மேம்பாட்டு கழகம் மூலமாக 2022-23 மற்றும் 2023-24ஆம் ஆண்டுகளில் 12ஆம் வகுப்பு பயின்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தினருக்கு HCL நிறுவனத்தில் வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே, திருச்சியைச் சேர்ந்த தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் இன்று அறிவித்தார்.

Similar News

News December 12, 2025

திருச்சி: டிச.31 கடைசி நாள் – ரூ.1000 அபராதம்!

image

பான் கார்டு மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. டிச.,31க்கு பிறகு இணைத்தால் ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு செயலிழந்து, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க<> eportal.incometax.in<<>> என்ற இணையத்தளத்திற்கு சென்று உங்கள் ஆதார் & பான் கார்டினை இணைக்கலாம். SHARE IT!

News December 12, 2025

திருச்சி: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000 நிதியுதவி

image

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணிகளின் நலன் கருதி, ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி’ எனும் அருமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளாக ரூ.14,000 நிதியுதவியும், ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. திட்டத்தில் பயன்பெற விரும்பும் கர்ப்பிணிகள் இங்கே<> க்ளிக் <<>>செய்து, விண்ணப்பிக்கலாம். SHARE NOW

News December 12, 2025

திருச்சி: ஊராட்சிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

image

திருச்சி மாவட்டத்தில் ஊராட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி புத்தாநந்தம் ஊராட்சி புத்தாநத்தம்-9, இடையப்பட்டி-12 எனவும், கண்ணுடையான்பட்டி ஊராட்சி, கண்ணுடையான்பட்டி-12, முத்தபுடையான்பட்டி-12 எனவும், கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சி கிருஷ்ணசமுத்திரம்-7, செம்மங்குளம்-1 எனவும், இனாம் குளத்தூர் ஊராட்சி ஆலம்பட்டி புதுார்-9, இனாம்குளத்துார்-2 எனவும் பிரிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!