News May 7, 2025
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அரசு உதவி!

விழுப்புரம் மாவட்ட இளைஞர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு! பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்குகிறது. மே 31-ஆம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலோ அல்லது இணையதளத்திலோ இதற்கு விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதிக்கு ஏற்ப மாதம் ரூ.1000 வரை உதவித்தொகை வழங்கப்படும். இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்!
Similar News
News September 18, 2025
பிரதம மந்திரி நிதி உதவி திட்டத்தில் பயன்பெற அழைப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் படி நடப்பாண்டு மாவட்டம் முழுவதும் 89 ஆயிரம் விவசாயிகளுக்கு, ரூ.53 கோடியே 40 லட்சம் நிதியுதவி வழங்கப்பட இருப்பதால், தகுதி வாய்ந்த விவசாயிகள் அனைவரும் இத்திட்டத்தில் பயன்பெற தங்கள் பகுதி வேளாண் துறை அலுவலர்களை அணுகி பதிவு செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2019 பிப்ரவரி 1ம் தேதிக்கு முன் கிரையம் செய்த நில உரிமையாளர்கள் பயன்பெறலாம்.
News September 18, 2025
விழுப்புரம் இளைஞர்களே இதோ வேலை வாய்ப்பு!

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை செப். 19 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 500-க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களை நிரப்ப உள்ளனர். இதில் விழுப்புரம் மாவட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News September 18, 2025
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு தடகள போட்டி

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான தடகள போட்டி நேற்று(செப்.17) நடந்தது. இதில் எஸ்.பி., சரவணன் தலைமை தாங்கி, போட்டியை துவக்கி வைத்து பேசினார். மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆழிவாசன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செந்தில்குமார், தடகள சங்க தலைவர் பொன்னுசாமி கார்த்திக், செயலாளர் மணிவண்ணன் முன்னிலை வகித்தனர்.