News May 7, 2025
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அரசு உதவி!

திருவண்ணாமலை மாவட்ட இளைஞர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு! பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்குகிறது. மே 31-ஆம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலோ அல்லது இணையதளத்திலோ இதற்கு விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதிக்கு ஏற்ப மாதம் ரூ.1000 வரை உதவித்தொகை வழங்கப்படும். இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்!
Similar News
News November 25, 2025
வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் மற்றும் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் பணிகளை உடனடியாக விரைவாக முடிக்குமாறு பணியாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
News November 25, 2025
தி.மலை: உங்களுக்கு ஓட்டு இருக்கா? CHECK பண்ணுங்க

தி.மலை மக்களே, வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கிறதா என உடனே செக் பண்ணுங்க.
1.புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
2.பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
3.வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய <
News November 25, 2025
தி.மலை: தீபத் திருவிழா இரண்டாம் நாள் உற்சவம்

தி.மலை அருள்மிகு ஸ்ரீ அருணாசலேஸ்வரர் திருக்கோவில், திருக்கார்த்திகை தீபத்திருவிழா – 2025, இரண்டாம் நாள் காலை இன்று (25/11/2025) ஶ்ரீ விநாயகர் மற்றும் ஶ்ரீ சந்திரசேகரர் சுவாமி சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனையொட்டி, சுவாமிக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


