News August 11, 2024
வேலூர் ரயில் காட்பாடி வரை மட்டுமே இயங்கும்

அரக்கோணத்தில் இருந்து தினமும் காலை 7:20 மணிக்கு வேலூர் கண்டோன்மென்ட் வரை மின்சார ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் ஆக.12 முதல் ஆக.14 வரை காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும். அதேபோன்று மறு மார்க்கத்தில் வேலூர் கண்டோன்மெண்டில் இருந்து அரக்கோணத்திற்கு காலை 10 மணிக்கு இயக்கப்படும் ரயிலானது காட்பாடியில் இருந்து மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே இன்று தெரிவித்துள்ளது.
Similar News
News October 19, 2025
ராணிப்பேட்டை: மழை குறித்து கண்காணிக்க புதிய கட்டுப்பாட்டு அறை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது, இந்நிலையில் நெமிலி வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று அக்டோபர் 18ம் தேதி கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டது. கட்டுப்பாட்டு அறையில் இரவு நேர பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நெமிலி தாலுகாவுக்கு உட்பட்ட கிராமங்களில் எங்காவது மழை பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
News October 19, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து காவலர்களின் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் (அக்-18) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு தங்களது உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 18, 2025
ராணிப்பேட்டை மக்களே மழை காலத்தில் கரண்ட் கட்டா..?

ராணிப்பேட்டை மக்களே தற்போது மழை காலம் தொடங்கியுள்ளதால் பல்வேறு பகுதியில் மின் விநியோகத்தில் பிரச்சனை எழும். அதனை சரி செய்ய லைன்மேனை நேரில் தேடி அலைய வேண்டாம். TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் உடனடியாக லைன் மேன் வருவார். இதை உடனே எல்லோருக்கும் SHARE பண்ணுங்க!