News April 7, 2025

வேலூர் மாவட்ட மக்கள் குறைத்தீர் கூட்டம் நிறைவு

image

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் இன்று (ஏப்ரல் 7) மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து 671 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இக்கூட்டத்தில் வேலூர் டி ஆர் ஓ மாலதி, வருவாய் கோட்டாட்சியர் செந்தில் குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News December 9, 2025

வேலூர்: ரேஷன் கார்டில் பிரச்னை? கலெக்டர் அறிவிப்பு!

image

வேலூர் மாவட்டத்தில் வரும் டிச.13ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் நடைபெறவுள்ளது. இதில், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல் முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும், தரம் குறித்த புகார்கள் இருப்பின் அதனையும் தெரிவிக்கலாம் என கலெக்டர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.

News December 9, 2025

வேலூர்: கட்டட தொழிலாளி கொலை!

image

வேலூர்: சதுப்பேரி பகுதியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி பிரேம்குமார் (34). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தந்தை கோட்டீஸ்வரன் (54), மகன் சக்தி (24) ஆகியோருக்கும் இடையே நேற்று(டிச.8) கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று (டிச.9) ஆர்.என்.பாளையம் பஜார் வீதியில் பிரேம்குமாரை தந்தை, மகன் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 9, 2025

வேலூர் மக்களே.., 5 ஏக்கர் நிலம் வாங்க வாய்ப்பு!

image

பெண்கள் சொந்த நிலம் வாங்க தமிழக அரசு அறிமுகப்படுத்திய ‘நன்னிலம்’ திட்டத்தின் கீழ் 2.5- 5 ஏக்கர் வரையிலான நிலம் வாங்க 50% மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள்ளிருக்கும் 18 – 56 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் TAHDCO அலுவலகத்தில் நேரடியாக சென்றோ (அ) <>இங்கு<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கவும். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!