News September 27, 2024
வேலூர் மாவட்ட மக்களுக்கு கலெக்டர் அழைப்பு

கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் “வேலூர் சங்கமம் நம்ம ஊரு திருவிழா” கோட்டை மைதானத்தில் நாளை செப்டம்பர் 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் 400 கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளோடு நடைபெறவுள்ளது. எனவே வேலூர் மாவட்ட மக்கள் வருகைதந்து நம் மண்ணின் கலைகளை கண்டு களித்து கலைஞர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
Similar News
News November 6, 2025
வேலூர் போலீஸ், ராஜஸ்தானில் அதிரடி!

குடியாத்தம் போலீசார் கடந்த மாதம் போதை மாத்திரை பயன்படுத்தியதாக 13 பேரை கைது செய்தனர். இவர்களுக்கு போதை மாத்திரை சப்ளை செய்தது ராஜஸ்தானை சேர்ந்தவர் என விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து எஸ்பி மயில்வாகனன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் ராஜஸ்தான் சென்று போதை மாத்திரைகளை சப்ளை செய்த பிரதாப் சௌத்ரி(36) நேற்று (நவ.05) கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 11,000 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
News November 6, 2025
வேலூர்: பாதி வழியிலே பழுதடைந்த 108

வேலூர் மாவட்டம், வேலூர் மாநகரத்தில் புதிதாக கட்டப்பட்ட அரசு பென்ட்லேண்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளை மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு இன்று (நவ.06) அழைத்துச் சென்றனர். அப்போது சாலைகளில் ஆம்புலன்ஸ் பழுதடைந்து நின்றதால் நோயாளிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
News November 6, 2025
வேலூர்: விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

வேலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் வருகிற நவம்பர் 15-ம் தேதிக்குள் வேளாண் அடுக்கக அடையாள எண்ணை பெற்றால் மட்டுமே பி.எம்.கிசான் தொகையை தொடர்ந்து பெற முடியும். எனவே இதுவரை அடையாள எண் பெறாத விவசாயிகள் உடனடியாக ஆதார் கார்டு, சிட்டா ஆகியவற்றுடன் அருகே உள்ள பொது சேவை மையம் அல்லது வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகலாம். என மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஸ்டீபன் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


