News April 13, 2025
வேலூர் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

வேலூர் மாவட்ட காவல்துறையினரின் இரவு ரோந்து பணிகள் இன்று 13.04.2025 அன்று இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மேற்கொள்ளப்பட்டன. மாவட்டம் முழுவதும் காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் ஹைவே காவல்படையினர் தங்களின் கடமைகளைச் சுறுசுறுப்புடன் செய்தனர். பொதுமக்களின் பாதுகாப்பிற்காக காவல்துறையினர் பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
Similar News
News October 16, 2025
வேலூர் மாவட்ட எஸ்பி கடும் எச்சரிக்கை

வேலூர் மாவட்டம் முழுவதும் இன்று (அக்-15) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில், 102 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக 2 பேர் மீது மதுவிலக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி மயில்வாகனன் எச்சரித்துள்ளார்.
News October 16, 2025
காவல் துறை சார்பில் இன்று இரவு ரோந்து பணி விவரங்கள்

வேலூர் மாவட்ட காவல் துறை சார்பில் இன்று (அக்.15) இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை நடைபெறும் இரவு ரோந்து பணிக்கான அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டது. வேலூர், காட்பாடி, காட்பாடி, அனைகட்டு பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மக்களின் பாதுகாப்புக்காக இரவு முழுவதும் சிறப்பு ரோந்துப் பணிகள் நடைபெறும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
News October 15, 2025
குடியாத்தம் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த ஆட்சியர்

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அரசு மருத்துவமனையில் ரூ.40 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள தலைமை மருத்துவமனையை ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று (அக்.15) பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) பியூலா ஆக்னஸ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுடலைமுத்து, வட்டாட்சியர் பழனி உட்பட பலர் உடனிருந்தனர்.