News October 24, 2024
வேலூர் மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

வேலூர் மாவட்டத்தில் 2வது முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் அமைப்பதற்கான சங்க உறுப்பினர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியுடைய நபர்களின் பெயர், முகவரி, கல்வித்தகுதி மற்றும் ஏற்கனவே மேற்கொண்ட சமூக தொண்டுகள் ஆகிய விவரங்களுடன் நவம்பர் 7-ம் தேதிக்குள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
Similar News
News November 21, 2025
வேலூரில் 658 பேருக்கு ரத்து!

வேலூரில் கடந்த ஜனவரி – அக்டோபர் வரை போலீசார் பரிந்துரையின் பேரில், மொத்தம் 658 பேரின் வாகன ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வட்டார போக்குவரத்து அலுவலர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். விபத்துகளில் உயிரிழப்பை ஏற்படுத்தியதாக 73 பேர், குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக 85 பேர், அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 129 பேர், செல்போன் பேசி கொண்டு வாகனம் ஓட்டியதாக 14 பேரின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
News November 20, 2025
வேலூர்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு!

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்களான குடியாத்தம், காட்பாடி, கே.வி. குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி இன்று (நவ.20) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
News November 20, 2025
வேலூர்: கலெக்டர் முக்கிய அறிவிப்பு…!

வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் திருத்த கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்ய வருகிற (நவ.22) சனிக்கிழமை மற்றும் (நவ.23) ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம்களை வாக்காளர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.


