News April 15, 2024
வேலூர் மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 10 வழக்குகள் பதிவு

வேலூர் மாவட்டம் முழுவதும் நேற்று (ஏப்ரல் 14) காவல் ஆய்வாளர்கள் தலைமையில் போலீசார் நடத்திய சோதனையில் 330 லிட்டர் கள்ளச்சாராயம், 110 மது பாட்டில்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக ஒரே நாளில் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 26, 2025
வேலூர்: மத்திய அமைச்சர் வருகையால் சலசலப்பு

வேலூரில், நேற்று (அக்.25) விவசாயிகளுடன் கலந்துரையாடுவதற்கு மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் காலை வருவதாக தெரிவித்தனர். ஆனால், அவர் தாமதமாக வந்த நிலையில், வந்திருந்த விவசாயிகளுக்கு உணவு வழங்கப்படவில்லை. பின் விவசாயி ஒருவர், கோபத்துடன் ‘நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது தமிழக அரசு. அவர்களிடம் கேட்காமல், டில்லியில் இருந்து வரும் மத்திய அமைச்சரிடம் சாப்பாடு கேட்கலாமா? எனக் சுட்டிக்காட்டினார்.
News October 26, 2025
வேலூர்: வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம்

வேலுார் மாவட்டத்தில் 6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் வரும் 27-ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடக்கிறது. இந்த முகாம் துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்களில் நடக்கிறது. புதன் மற்றும் ஞாயிறு தவிர மற்ற நாட்களில் வைட்டமின் ஏ திரவம் வழங்கப்படும். 95 ஆயிரத்து 281 குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கப்பட உள்ளது என மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
News October 25, 2025
வேலூர்: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY…!

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. <


