News October 25, 2024

வேலூர் மாவட்டத்தில் 75 மது பாட்டில்கள் பறிமுதல்

image

வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (அக்டோபர் 24) நடத்திய சோதனையில் 75 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக நேற்று ஒரே  நாளில் 5 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Similar News

News September 15, 2025

அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பம் கலெக்டர் தகவல்

image

வேலூர் மாவட்டத்தில் 2024-2025 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு வழங்கும் டாக்டர். அம்பேத்கர் விருது பெற தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் சுப்புலட்சுமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். விருதுக்கான விண்ணப்பத்தை மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம். விண்ணப்பங்களை வரும் 20-ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 15, 2025

வேலூர் விஐடி: கல்வி கடன் முகாம் ஒத்திவைப்பு

image

வேலூர் வி.ஐ.டி. வளாகத்தில், நாளை (செப்.16) நடைபெற இருந்த கல்வி கடன் முகாம், செப்.23-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் பெற்றோரின் வசதிக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ள இந்த முகாமில், கல்விக்கடன் தொடர்பான அனைத்து விண்ணப்பங்களுக்கும் ஒரே இடத்தில் தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News September 15, 2025

பள்ளி மாணவிகளுக்கு ரூ.75,000/-க்கான வைப்புத்தொகை

image

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ, மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ மாணவ, மாணவியர் ஒவ்வொருவருக்கும் நிதியுதவி ரூ.75,000/- வழங்கும் திட்டத்தின்கீழ் வேலூர் மாவட்டத்தில் 9 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.75,000/-க்கான வைப்புத்தொகை ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று வழங்கினார்.

error: Content is protected !!