News April 10, 2025

வேலூர் மாவட்டத்தில் 292 பணியிடங்கள் அறிவிப்பு

image

வேலூர் மாவட்ட பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 292 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளன. பணியிடங்களின் எண்ணிக்கை, அந்தந்த வட்டார அலுவலகங்களில் தகவல் பலகையில் ஒட்டப்படும். 18-40 வயதுடைய 10th பாஸ்/ஃபெயில் ஆன பெண்கள் பிடிஓ அலுவலகம், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் ஏப்.26 மாலைக்குள் விண்ணப்பிக்கலாம். *செம வாய்ப்பு. தெரிந்த 18-40 வயது பெண்களுக்கு பகிரவும்*

Similar News

News December 17, 2025

குடியாத்தம் தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம்!

image

குடியாத்தம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் நாளை டிச.18 காலை 11 மணியளவில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் ஆர்டிஓ சுபலட்சுமி தலைமையில் நடைபெற உள்ளது. இதில் பல துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். எனவே, குடியாத்தம், கே.வி.குப்பம், பேரணாம்பட்டு ஆகிய தாலுகாக்களை சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதி நிதிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகள் தெரிவிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News December 17, 2025

ஜனாதிபதி முர்முவை வரவேற்ற வேலூர் கலெக்டர்!

image

ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது சுற்றுப்பயணத்தை நேற்று முதல் தொடங்கி, வருகிற 22-ந் தேதி வரை கர்நாடகா, தமிழ்நாடு, தெலுங்கானா மாநிலங்களில் மேற்கொள்கிறார். இந்நிலையில் இன்று (டிச.17) திருப்பதி ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோவிலுக்கு 11:30 மணிக்கு வருகை தந்தார். அவரை வேலூர் கலெக்டர் சுப்புலெட்சுமி, பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

News December 17, 2025

ஜனாதிபதிக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு!

image

வேலூர் மாவட்டம் அரியூரில் உள்ள ஸ்ரீபுரம் தங்க கோயிலுக்கு இன்று (டிச.17) வருகை தந்த இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு பொற்கோயில் சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பின் போது தமிழக கவர்னர் ஆர்.என். ரவி, மத்திய இணை அமைச்சர் முருகன், தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!