News April 10, 2025

வேலூர் மாவட்டத்தில் 292 பணியிடங்கள் அறிவிப்பு

image

வேலூர் மாவட்ட பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 292 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளன. பணியிடங்களின் எண்ணிக்கை, அந்தந்த வட்டார அலுவலகங்களில் தகவல் பலகையில் ஒட்டப்படும். 18-40 வயதுடைய 10th பாஸ்/ஃபெயில் ஆன பெண்கள் பிடிஓ அலுவலகம், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் ஏப்.26 மாலைக்குள் விண்ணப்பிக்கலாம். *செம வாய்ப்பு. தெரிந்த 18-40 வயது பெண்களுக்கு பகிரவும்*

Similar News

News November 6, 2025

வேலூர்: டிகிரி போதும் ரூ.85,920 சம்பளம்!

image

வேலூர் மக்களே, பஞ்சாப் நேஷனல் வங்கியில் 750 LOCAL BANK OFFICER காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 20 வயது பூர்த்தி அடைந்து, ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவராக இருக்க வேண்டும். மாத அசமபலமாக ரூ.48,480 – ரூ.85,920 வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள்<> இங்கே கிளிக்<<>> செய்து நவ.23-குல் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News November 6, 2025

வேலூர்: பள்ளி பேருந்து மோதியதில் சிறுமி பலி

image

வேலூர்: வரதரெட்டிபள்ளி பகுதியை சேர்ந்த ஜெயச்சந்திரன் – மோனிகா தம்பதியின் மகள் கீர்த்தீஷா (4) பரதராமியில் உள்ள தனியார் பள்ளியில் LKG படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று (நவ.5) மாலை பள்ளி பேருந்தில் இருந்து இறங்கி முன்பக்கமாக நடந்து வந்துள்ளார். இதை கவனிக்காமல் ஓட்டுநர் தமிழ்செல்வன் பேருந்தை இயக்கியதால், சிறுமி மீது பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

News November 6, 2025

வேலூரில் பணம் திருடிய வாலிபருக்கு 3 மாதம் சிறை

image

வேலூர் ஓல்டு டவுனைச் சேர்ந்த வினோத் (29). கடந்த ஆண்டு பிரிண்டிங் பிரஸ்ஸில் வேலை செய்தபோது, ரூ.1.30 லட்சம் பணத்தை திருடிய வழக்கில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டார். இதுகுறித்து கடை உரிமையாளர் ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வினோத்தை இன்று (நவ.06) கைது செய்தனர். வழக்கு விசாரணை முடிவில், மாஜிஸ்திரேட் ரஞ்சிதா, வினோத்துக்கு 3 மாதம் சிறை தண்டனையும் ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்தனர்.

error: Content is protected !!