News March 29, 2024
வேலூர் மாவட்டத்தில் 2641 நபர்களுக்கு தபால் வாக்கு

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் 85 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் பணிபுரியும் நபர்கள் என மொத்தம் 2, 641 நபர்கள் தங்கள் வாக்கினை தபால் வாக்குகள் மூலம் செலுத்த விருப்பம் தெரிவித்துள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சுப்புலெட்சுமி இன்று (மார்ச் 29) தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 26, 2025
வேலூரில் இன்று வாகனங்கள் ஏலம்

வேலூர் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 81 இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் 3 நான்கு சக்கர வாகனங்கள் உடைக்க தகுதியுள்ள நிலையில் (scrab) இன்று (நவ.26) தேதி காலை 9 மணிக்கு வேலூரில் உள்ள நேதாஜி விளையாட்டு மைதானத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது. இதில் பங்கேற்க ரூ.100 கட்டணம் செலுத்தி ஏலத்தில் பங்கேற்கலாம் என வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் தெரிவித்துள்ளார்.
News November 26, 2025
வேலூர்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <
News November 26, 2025
வேலூர்: பெண் மீது பாய்ந்த துப்பாக்கித் தோட்டா!

கே.வி. குப்பம் மாச்சனூர் கொல்லைமேடு பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ். இவர் மனைவி ராமு ( 55). நேற்று (நவ.25 ) இவர் வீட்டில் இருந்தபோது, பறவைகளை வேட்டையாடப் பயன்படுத்தப்படும், ஏர்கன் துப்பாக்கித் தோட்டா பாய்ந்தது. இதனால் ராமு காயம் அடைந்து, மயங்கி விழுந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து கே.வி.குப்பம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


