News August 18, 2024

வேலூர் மாவட்டத்தில் 104 மது பாட்டில்கள் பறிமுதல்

image

வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (ஆகஸ்ட் 18) நடத்திய சோதனையில் 104 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒரே நாளில் 3 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இத்தகைய தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 5, 2025

வேலூர்: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

image

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க!

News December 5, 2025

வேலூர்: ஆன்லைன் மோசடி-ரூ.26 லட்சத்தை பறிகொடுத்த பெண்!

image

வேலூரை சேர்ந்த 35 வயது பெண்ணின் செல்போனுக்கு பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஒரு லிங்க் வந்துள்ளது. இதை உண்மை என நம்பிய அவர் போலியான பங்கு சந்தை வெப்சைட்டில் 26 லட்சம் செலுத்தி உள்ளார். அவர் செலுத்திய பணத்துக்கு கிடைத்த லாபத்தை எடுக்க முயன்ற போது எடுக்க முடியவில்லை. இதுகுறித்து பெண் ஆன்லைன் மூலம் அளித்த புகாரின் பேரில் வேலூர் சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 5, 2025

வேலூர்: சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ!

image

வேலூரை அடுத்த அரியூர் பகுதியை சேர்ந்த 18 வயது வாலிபர் 17 வயது சிறுமியை காதலித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் 17 வயது சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாக அரசு மருத்துவர்கள் அரியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அந்த வாலிபர் மீது நேற்று (டிச.4) போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!