News April 28, 2025
வேலூர் மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் கலெக்டர் உத்தரவு

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடத்தப்பட வேண்டுமென தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, வேலுார் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் வருகிற மே மாதம் 1-ம் தேதி தொழிலாளர் தினத்தன்று காலை 11 மணிக்கு தவறாமல் கூட்டப்பட வேண்டுமென அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News December 3, 2025
வேலூர்: காதல் தகராறில் இளைஞர் தற்கொலை!

பள்ளிகொண்டா, பிராமணமங்கலம் புதுமனை பகுதியை சேர்ந்தவர் மோனிஷ் (29), பெங்களூருவில் உள்ள ஒரு பெண்ணை 8 வருடங்களாக காதலித்து வந்த நிலையில், மோனிஷின் பெற்றோர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இந்நிலையில், மோனிசுக்கும் அந்த பெண்ணிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மோனிஷ் நேற்று (டிச.2) தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 3, 2025
காட்பாடியில் ரூ.1.41 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று (டிச.3) 341 மாற்றுத்திறனாளிகளுக்கு 1.41 கோடி மதிப்பிலான நல திட்ட உதவிகளை காட்பாடி விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார். இதில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன், துணை மேயர் சுனில்குமார் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
News December 3, 2025
வேலூர்: இனி ஆதார் கார்டு வேண்டாம்.. இது போதும்!

வேலூர் மக்களே.. இனிமேல் உங்களின் ஆதார் கார்டை எப்போதும் கையிலேயே எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இங்கு <


