News August 4, 2024
வேலூர் மாவட்டத்தில் காவல் ஆய்வாளர்கள் மாற்றம்

வேலூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட மாவட்டங்களான வேலூர், திருப்பத்தூர். திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களளில் பணிபுரியும் 45 காவல் ஆய்வாளர்கள் பல்வேறு காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை வேலூர் சரக டி.ஐ.ஜி சரோஜ் குமார் தாக்கூர் நேற்று வெளியிட்டுள்ளார். மேலும், அந்ததந்த மாவட்ட எஸ்பி-க்கள் மாற்றம் பெற்றவர்களுக்கு ஆணையை வழங்குமாறு தெரிவித்துள்ளார்.
Similar News
News November 17, 2025
வேலூரில் 753 பேர் ஆப்சென்ட்!

வேலூர் மாவட்டத்தில் நேற்று (நவ.16), தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-2, 32 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வினை எழுத மொத்தம் 8,263 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், தேர்வு எழுத 7,510 பேர் மட்டுமே ஆர்வமுடன் வந்திருந்தனர். மீதம், 753 நபர்கள் தேர்வு எழுத வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 17, 2025
வேலூர்: B.E/B.Tech படித்தால் ரூ50,000!

வேலூர்: இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க இங்கே <
News November 17, 2025
வேலூர்: 25 பவுன் நகை, பணம் கொள்ளை!

வேலூர்: கொசப்பேட்டை திருமலை தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் (56) தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது 25 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் பணம் திருடு போயிருப்பது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த அவர் வேலூர் தெற்கு போலீசில் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


