News August 4, 2024

வேலூர் மாவட்டத்தில் காவல் ஆய்வாளர்கள் மாற்றம்

image

வேலூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட மாவட்டங்களான வேலூர், திருப்பத்தூர். திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களளில் பணிபுரியும் 45 காவல் ஆய்வாளர்கள் பல்வேறு காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை வேலூர் சரக டி.ஐ.ஜி சரோஜ் குமார் தாக்கூர் நேற்று வெளியிட்டுள்ளார். மேலும், அந்ததந்த மாவட்ட எஸ்பி-க்கள் மாற்றம் பெற்றவர்களுக்கு ஆணையை வழங்குமாறு தெரிவித்துள்ளார்.

Similar News

News October 27, 2025

வேலூர்: 56 ஏரிகள் முழுமையாக நிரம்பியது

image

வேலூர் மாவட்டத்தில் பொது பணித்துறையின் கட்டுப்பாட்டில் 101 ஏரிகள் உள்ளன. அதில் தற்போது வடகிழக்கு பருவமழையால் 56 ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளது. 5 ஏரிகளில் 76 முதல் 99 சதவீதமும், 8 ஏரிகளில் 51 முதல் 75 சதவீதமும், 11 ஏரிகளில் 26 முதல் 50 சதவீதமும், 21 ஏரிகளில் 25 சதவீதத்துக்கும் குறைவாக நீர் உள்ளது. என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News October 27, 2025

வேலூர்: இரவு ரோந்து காவலர்களின் விவரம்

image

வேலூர் மாவட்டத்தில் (அக்.26) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணியில் காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்தில் உட்கோட்ட போலீஸ் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் பெயரும் வழங்கப்பட்டுள்ளது.

News October 26, 2025

வேலூர்: 10th போதும் – அரசு பள்ளியில் வேலை ரெடி

image

வேலூர் மக்களே.. மத்திய அரசின் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளில் 7,267 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் கடைசி தேதி அக்.28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், செவிலியர், விடுதிக்காப்பாளர் போன்ற பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.18,000-ரூ.2,09,200 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் இங்கு<> க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!