News November 24, 2024
வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் குவிந்த 4308 மனுக்கள்

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் இன்று (நவம்பர் 23) நடந்தது. இதில் பெயர் சேர்க்க 2449 விண்ணப்பங்களும், நீக்கம் செய்ய 396 விண்ணப்பங்களும், திருத்தம், முகவரி மாற்றம் தொடர்பாக 1463 விண்ணப்பங்களும் என மாவட்டம் முழுவதும் 4,308 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளது என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News November 8, 2025
வேலூர் அருகே ஆடு திருடிய 3 பேர் கைது

அரியூர் பகுதியை சேர்ந்தவர் நிஷாந்தி. இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு மேய்ச்சலுக்கு விட்டிருந்தபோது ஒரு ஆட்டை மர்மநபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து அவர் அரியூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து ஆட்டை திருடிய சத்துவாச்சாரியை சேர்ந்த சீனிவாசன் (27), பாபுசேட்டு (25), வினோத்குமார் (30) ஆகிய 3 பேரையும் நேற்று கைது செய்தனர்.
News November 8, 2025
வேலூர் மாவட்ட காவல்துறை இரவு பணி விவரம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன அதன்படி ( நவம்பர்-07) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
News November 7, 2025
வேலூர்: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் இங்கு <


