News February 15, 2025
வேலூர் மண்டல மாநாடு டி-ஷர்ட் அறிமுகம்

அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை வேலூர் மண்டல மாநாடு பிப்ரவரி 16 அன்று நடைபெற உள்ளது. இந்நிலையில் ராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் சார்பில் கலந்து கொள்ளும் இளைஞர்களுக்கு டி-ஷர்ட்டுகளை, மாவட்ட செயலாளர் S.M.சுகுமார் இன்று வழங்கி துவக்கி வைத்தார். இந்நிகழ்வில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News November 30, 2025
ராணிப்பேட்டையில் முகாம்கள் தயார் -ஆட்சியர் அறிவிப்பு!

டிட்வா புயல் காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு இன்று நவ-30ஆம் தேதி ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அதீத கன மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே மழை பெய்யும் நேரத்தில் பொதுமக்கள் அவசியம் இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். மேலும், 40 தற்காலிக முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.என மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று (நவ.29) தெரிவித்துள்ளார்.
News November 30, 2025
‘டிட்வா’ புயலால் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு RED ALERT!

வட கடலோரப் பகுதியை நோக்கி நகரும்’டிட்வா’ புயலால் தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு அதிமிக கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். அண்டை மாவட்டங்களான வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்திற்கும் ஆரஞ்ச் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அத்தியாவசியத் தேவையின்றி வெளியே வர வேண்டாம். மற்றவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News November 30, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (நவ-29) இரவு 10 மணி முதல் இன்று (நவ.30) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர. பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்!


