News April 12, 2024
வேலூர்: மணல் கடத்திய லோடு வேன் பறிமுதல்

வேலூர் சத்துவாச்சாரி போலீசார் நேற்றிரவு (ஏப்ரல் 11) பிள்ளையார் குப்பம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு லோடு வேன் வந்தது. போலீசாரை பார்த்ததும் வேனை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர். பின்னர் போலீசார் லோடு வேனை சோதனை செய்த போது மணல் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து மணலுடன் வேனை போலீசார் பறிமுதல் செய்து தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.
Similar News
News April 19, 2025
வேலூர் கிறிஸ்தவ கல்லூரியில் வேலை வாய்ப்பு

வேலூர் கிறிஸ்தவ மருத்துவக்கல்லூரியில் பயோ மெடிக்கல் இன்ஜினீரிங் பிரிவில் ஜூனியர் இன்ஜினியர் பதவிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப பட உள்ளது. 30 வயதிற்குட்பட்ட டிப்ளமா எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் இன்ஜினீரிங் அல்லது பயோ மெடிக்கல் இஞ்சினீரிங் படித்த இளைஞர்கள் இந்த<
News April 19, 2025
வேலூரில் இன்ஜினியரிங் படித்தால் வேலை

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO – ADA), காலியாகவுள்ள பிராஜெக்ட் சயின்டிஸ்ட் பணியிடங்களை நிரப்ப உள்ளது. 137 காலிப்பணியிடங்கள் உள்ளன. இன்ஜினியரிங் டிகிரி, மாஸ்டர் டிகிரி, Ph.D படித்தால் போதும். 40 வயதுக்கு உட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ரூ.90,789 முதல் ரூ.1,08,073 வரை சம்பளம் வழங்கப்படும். வரும் 21ஆம் தேதிக்குள் இந்த லிங்கை <
News April 19, 2025
17 வயது சிறுமி கர்ப்பம்: வாலிபர் கைது

வேலூர் மாவட்டம் சம்பத் நகரைச் சேர்ந்தவர் தனுஷ் (20). இவர் 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கர்ப்பமடைந்த சிறுமி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு சென்றபோது, அவரின் ஆதார் அட்டையை பார்த்த டாக்டர்கள் சிறுமிக்கு 18 வயது நிரம்பாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மகளிர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தனுஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.