News May 9, 2024

வேலூர்: மணல் கடத்திய லாரி பறிமுதல்

image

வேலூர் இடையன்சாத்து பகுதியில் பென்னாத்தூர் விஏஓ காசி நேற்று (மே 8) மணல் கடத்தலை தடுக்க வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கனரக லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் மணல் இருந்தது. அதற்கான ஆவணங்கள் இல்லை. இதையடுத்து 3 யூனிட் மணலுடன் லாரியை பறிமுதல் செய்து பாகாயம் போலீஸ் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் காசி ஒப்படைத்தார். டிரைவர் சீனிவாசன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Similar News

News April 21, 2025

எதிர்காலத்தை பற்றி குழப்பமா இங்க போங்க

image

வேலூரில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயில், சுமார் 1,500 ஆண்டுகள் பழமையானதகும் இந்த சிவலிங்கத்தின் கீழே தண்ணீர் இருப்பதாகக் கூறப்படுகிறது அதனால் இங்குள்ள சிவபெருமாளுக்கு ஜலகண்டேஸ்வரர் என்கிற பெயரும் உள்ளது. காசிக்கு சென்று வந்தால் அமையும் மாற்றத்தை போல இந்த கோயிலுக்கு வந்து வேண்டி சென்றால் புதிய வழிகள் பிறக்கும் என்பது நம்பிக்கை, எதிர்காலத்தை பற்றி கவலைப்படுவோர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News April 21, 2025

வேலூரில் வாட்டி வதைக்கும் வெயில்

image

வேலூரில், வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதில் இருந்து தற்காத்துக் கொள்ள போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பயணத்தின்போது குடிநீர் எடுத்துச் செல்லுங்கள். ORS, எலுமிச்சை சாறு, இளநீர், மோர் போன்றவற்றை குடிக்கலாம். மென்மையான பருத்தி ஆடைகளை அணியுங்கள். வெளியே செல்லும்போது காலணி, தொப்பி அணிந்து, குடை பிடித்து செல்லுங்கள். மதிய நேர வெயிலில் செல்வதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

News April 21, 2025

ஓட்டுநர், நடத்துநர் பணி: இன்றே கடைசி நாள்

image

போக்குவரத்து கழகத்தில் 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள் உள்ளன. 24 – 40 வயதுடையவராக இருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 18 மாதங்கள் கனரக வாகனம் ஒட்டியதற்கான அனுபவம் வேண்டும். எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்காணல் உண்டு. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால், உடனே இந்த <>லிங்கை <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்கவும். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!