News March 26, 2025

வேலூர் பிஎஃப் அலுவலகம் சார்பில் நாளை சிறப்பு முகாம்

image

வேலூர் மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில் ‘நிதிஆப்கே நிகட் 2.0’ எனும் முகாம் நாளை (மார்ச் 27) வேலூர் ஜி.பி.எச். சாலையிலுள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் புதிதாக தொடங்கப்பட்ட நிறுவனங்களின் முதலாளிகள், தொழிலாளர்களின் கடமைகள், பொறுப்புகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட உள்ளது என தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையர் எம்.எச்.வார்சி தெரிவித்துள்ளார்.

Similar News

News January 11, 2026

வேலூர்: அண்ணன் வீட்டுக்கு சென்றவர் துடிதுடித்து பலி!

image

வேலூர்: மோசூரைச் சேர்ந்த அரசு தற்காலிக ஊழியர் விவேக் குமார் (35), திருவள்ளூரில் உள்ள தனது அண்ணன் வீட்டிற்கு, நேற்று பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பள்ளிப்பட்டு அடுத்த குமாரராஜூ பேட்டை பகுதியில் சாலை பணிக்காக கொட்டப்பட்டிருந்த மண் குவியல் மீது பைக் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட விவேக் குமார் துடிதுடித்து பலியானார். பள்ளிப்பட்டு போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 11, 2026

வேலூர்: சிறுமிகளுக்கு ஆசை வார்த்தை – 2 பேருக்கு போக்சோ!

image

பள்ளிகொண்டா அருகே ஒருவர் இட்லிகடை நடத்தி வருகிறார். அவரது 2 மகள்களும் இவருக்கு உதவியாக இருந்துள்ளனர். இந்நிலையில், முன்தினம் இரவு 2 மகள்களையும் காணாமல் பதறிய அவர், போலீஸிடம் புகாரளித்தார். விசாரணையில், விக்னேஷ் (19), ரசாக் (20) ஆகிய இளைஞர்கள் சிறுமிகளை வேளாங்கண்ணி அழைத்துச் சென்று திருமணம் செய்ய முயன்றது தெரியவந்தது. தொடர்ந்து சிறுமிகளை மீட்ட போலீசார், வாலிபர்களை நேற்று போக்சோவில் கைது செய்தனர்.

News January 11, 2026

வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி நேற்று (ஜன.10) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!