News March 26, 2025
வேலூர் பிஎஃப் அலுவலகம் சார்பில் நாளை சிறப்பு முகாம்

வேலூர் மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில் ‘நிதிஆப்கே நிகட் 2.0’ எனும் முகாம் நாளை (மார்ச் 27) வேலூர் ஜி.பி.எச். சாலையிலுள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் புதிதாக தொடங்கப்பட்ட நிறுவனங்களின் முதலாளிகள், தொழிலாளர்களின் கடமைகள், பொறுப்புகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட உள்ளது என தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையர் எம்.எச்.வார்சி தெரிவித்துள்ளார்.
Similar News
News December 19, 2025
வேலூர்: வாலிபர் தூக்கிட்டு தற்கொலை!

வேலூர் விருபாட்சிபுரம் பெரியார் நகர் பாறை மேட்டை சேர்ந்தவர் சவுரி (23) இவரது மனைவி பிரீத்தி தற்போது 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். மதுவுக்கு அடிமையான சவுரிக்கும் அவரது மனைவிக்கும் இடையே நேற்று இரவு தகராறு ஏற்பட்டது. அப்போது மது போதையில் இருந்த சவுரி ஆவேசத்தில் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, தகவல் அறிந்த பாகாயம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 19, 2025
JUSTIN: வேலூரில் 2,15,025 வாக்காளர்கள் நீக்கம்!

வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் சிறப்பு வாக்காளர் தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், இன்று (டிச.19) மாவட்ட தேர்தல் அதிகாரி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதன்படி, வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 2,15,025 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையின்படி, தற்போது 8,42,980 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
News December 19, 2025
வேலூர்: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY…!

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. <


