News March 26, 2025
வேலூர் பிஎஃப் அலுவலகம் சார்பில் நாளை சிறப்பு முகாம்

வேலூர் மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில் ‘நிதிஆப்கே நிகட் 2.0’ எனும் முகாம் நாளை (மார்ச் 27) வேலூர் ஜி.பி.எச். சாலையிலுள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் புதிதாக தொடங்கப்பட்ட நிறுவனங்களின் முதலாளிகள், தொழிலாளர்களின் கடமைகள், பொறுப்புகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட உள்ளது என தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையர் எம்.எச்.வார்சி தெரிவித்துள்ளார்.
Similar News
News January 7, 2026
வேலூர்: அக்கா வீட்டிற்கு வந்த தம்பிக்கு நேர்ந்த சோகம்!

வேலூர்: ஆந்திராவைச் சேர்ந்த சீனிவாசலு (38), வேலூர் முள்ளிப்பாளையத்தில் உள்ள தனது அக்கா தமிழ் செல்வி வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவர் அங்குள்ள கிணற்றில் குளிக்கச்சென்றுள்ளார். அப்போது, நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அவரது உடலை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 7, 2026
வேலூர்: சிறுமிகளின் ஆபாச படங்களை பகிர்ந்த நபர்!

குடியாத்தம் தரணம்பேட்டையை சேர்ந்த சையத் நியாஸ் (31). இவர் சிறுமிகளின் ஆபாச படங்களை இணையதளத்தில் பகிர்ந்ததாக கடந்த 2020-ம் ஆண்டு குடியாத்தம் மகளிர் போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை வேலூர் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ராதாகிருஷ்ணன், சையத் நியாஸ்க்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார்.
News January 7, 2026
வேலூர்: மின் வெட்டு பகுதிகள்!

வேலூர் மாவட்டத்தில் இன்று (07.01.2026) பல்வேறு பகுதிகளில் மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லிக்குப்பம், லாலாப்பேட்டை, கல்மேல்குப்பம், தக்கன்பாளையம், எம்.ஆர்.புரம், கொடைக்கல், ரேனாண்டி, ஜம்புகுளம், மருதாலம், பாலகிருஷ்ணாபுரம், புலிவலம், சூரை, எம்.வி.புரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் மின் விநியோக பராமரிப்பு பணிகளுக்காக இந்த தற்காலிக தடை அறிவிக்கப்பட்டுள்ளது.


