News March 26, 2025
வேலூர் பிஎஃப் அலுவலகம் சார்பில் நாளை சிறப்பு முகாம்

வேலூர் மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில் ‘நிதிஆப்கே நிகட் 2.0’ எனும் முகாம் நாளை (மார்ச் 27) வேலூர் ஜி.பி.எச். சாலையிலுள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் புதிதாக தொடங்கப்பட்ட நிறுவனங்களின் முதலாளிகள், தொழிலாளர்களின் கடமைகள், பொறுப்புகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட உள்ளது என தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையர் எம்.எச்.வார்சி தெரிவித்துள்ளார்.
Similar News
News December 12, 2025
வேலூர்: ஓட்டுநருக்கு பீர் பாட்டிலால் தாக்குதல்!

வேலூர், காட்பாடி திருப்பாக்குட்டை பகுதியை சேர்ந்த சரண்ராஜ் (33). இவர் வேலூர் பழைய பஸ்நிலையம், ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார். அதே ஆட்டோ ஸ்டாண்டில் ஓட்டுபவர்கள் 4 பேருக்கும் சரண்ராஜுக்கும் தகராறு ஏற்பட்டிருந்தது. இதனால் சரண்ராஜை பின்தொடர்ந்து மேல்மொணவூர் பைபாஸ் சாலையில் வழிமறைத்து மிரட்டி, பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர். அதன் பெயரில் விரிஞ்சிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறது.
News December 12, 2025
வேலூர்: சிறுமி வன்கொடுமை.. முதியவர் செய்த செயல்!

வேலூரை சேர்ந்த 14 வயது சிறுமி, 9-ம் வகுப்பு படித்து வருகிறாள். மாணவி பள்ளியின் அருகே உள்ள பெட்டிக்கடையில் தின்பண்டங்கள் வாங்க சென்ற போது கடையின் உரிமையாளரான 60 வயது முதியவர் கையை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவி பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்து மாணவியின் தாயார் நேற்று மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News December 12, 2025
வேலூரில் விஜய் முதல்வராக சபரிமலைக்கு பயணம்!

வேலூரில் இன்று தமிழக வெற்றி கழகம் நிறுவனத் தலைவர் விஜய் (2026) தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதல்வராக ஆக வேண்டும் என்று நிர்வாகிகள் சபரிமலைக்கு தரிசனம் செய்தனர். வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட தமிழக வெற்றி கழகம் நிர்வாகிகள் சபரிமலை மாலை அணிந்து தரிசனம் செய்ய சென்றனர். பக்தர்களுக்கு வழி அனுப்ப ஏராளமான அக்கட்சி நிர்வாகிகள் பங்கேற்று வழி அனுப்பி வைத்தனர்.


