News May 16, 2024

வேலூர்: தலையில் கல்லை போட்டு கொலை… கைது!

image

குடியாத்தம் தரணம்பேட்டை பஜாரில் கடந்த மாதம் தூங்கிக் கொண்டிருந்த சின்னக்குழந்தை (75) என்பவர் தலையின் மீது தரணி என்பவர் கல்லை போட்டு கொலை செய்து விட்டு ஓடிவிட்டார். இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து தரணியை நேற்று கைது செய்தனர். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர்.

Similar News

News December 18, 2025

வேலூர்: மைனர் பெண்ணை திருமணம் செய்த வாலிபர்!

image

பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம் போயர் தெருவை சேர்ந்தவர் சிவா (28). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். பணி நிமித்தமாக ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதிக்கு சென்றபோது அங்கு 17 வயது மைனர் பெண்ணுடன் சிவாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனால் அவரை வெட்டுவானம் அழைத்து வந்து ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டுள்ளார். நேற்று தகவலறிந்த பள்ளிகொண்டா போலீசார் சிவா மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News December 18, 2025

வேலூர்: உங்கள் PAN Card-இல் இது கட்டாயம்!

image

வேலூர் மக்களே, நமது அத்தியாவசிய தேவைகளை பெறுவதற்கு, நமக்கு PAN Card தேவைப்படுகிறது. இந்த நிலையில், மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் (CBDT) டிச.31 ஆம் தேதிக்குள் பான் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க அறிவுறுத்தியுள்ளது. இதற்காக நீங்கள் நேரடியாக எங்கும் அலைய வேண்டியதில்லை. இந்த லிங்க்கை <>கிளிக்<<>> செய்து உங்கள் ஆதார் அட்டை, PAN card உடன் இணைக்கப்பட்டுள்ளதா என தெரிந்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

News December 18, 2025

வேலூரில் சுதந்திர போராட்ட தியாகிகள் குறை கேட்பு கூட்டம்

image

வேலூர், சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான குறை கேட்பு கூட்டம் நாளை (டிச.18) நடைபெற உள்ளது. இதில் தியாகிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்துக்கொண்டு தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகளை நேரடியாக தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி அறிவித்துள்ளார்.

error: Content is protected !!