News April 27, 2025

வேலூர்: தலைமறைவான குற்றவாளி கைது

image

பேரணாம்பட்டு டவுன் பகுதியைச் சேர்ந்த இம்ரான் அஹம்மத் (25) மீது திருட்டு, வழிப்பறி வழக்குகள் உள்ளன. இந்த வழக்கு விசாரணைக்கு இம்ரான் அஹம்மத் ஆஜராகாமல் தலைமறைவானார். இதையடுத்து இம்ரான் அஹம்மத் மீது ஜாமீனில் வெளியில் வராதவாறு பிடிவாரண்ட் பிறப்பித்து கைது செய்யுமாறு பேரணாம்பட்டு போலீசாருக்கு கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி போலீசார் சென்னையில் பதுங்கியிருந்த இம்ரான் அஹமதை நேற்று கைது செய்தனர்.

Similar News

News November 13, 2025

வேலூர்: திருமணமான 4 மாதத்தில் பலி

image

ஒடுகத்தூரை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன்(32). இவர் கே.வி.குப்பம் பி.கே.புரத்தில் தனது மனைவி அஸ்வினியைப் பார்க்க நேற்று (நவ.12 ) மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். அப்போது பின்னால் வந்த கார் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. அதில் சவுந்தர்ராஜன் சம்பவ இடத்திலேயே பறித்தனமாக உயிரிழந்தார். இவருக்கு திருமணமாகி 4 மாதங்களே ஆகின்றன. கே.வி.குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 13, 2025

வேலூர்: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

image

வேலூர் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…

News November 13, 2025

வேலூர் மாவட்டத்தில் 5,933 டன் உரம் இருப்பு உள்ளது

image

வேலூர் மாவட்டத்தில் விவசாயிகள் பயப்பெறும் வகையில் யூரியா 1,070 டன், டி.ஏ.பி.1,225 டன், பொட்டாஷ் 601 டன், கலப்புரம் 2,707 டன், சூப்பர் பாஸ்பேட் 330 டன் என மொத்தம் 5,933 டன் உரம் மாவட்டத்தில் உள்ள 52 கூட்டுறவு மற்றும் 72 தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!