News August 3, 2024
வேலூர் டெங்கு பாதிப்பு கலெக்டர் திடீர் ஆய்வு

வேலூர் மாநகராட்சி 3 வது மண்டலத்திற்கு உட்பட்ட 57 வது வார்டில் சி.எம்.சி. காலனியில் டெங்கு பாதித்த நபரின் இல்லத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று(ஆகஸ்ட் 3) நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு பாதிக்கப்பட்ட நபரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது வேலூர் மாநகராட்சி ஆணையா் ஜானகி ரவீந்திரன், மாநகர நல அலுவலர் கணேஷ் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News September 18, 2025
வேலூர் ஆட்சியர் பயிற்சி வகுப்புகள் குறித்து அறிவிப்பு

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கப்படுகிறது. தற்போது தாட்கோ, தனியார் நிறுவனத்துடன் இணைந்து அழகுக்கலை, சிகை அலங்கார பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதை பெற (www.tahdco.com) என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
News September 18, 2025
வேலூர்: B.Sc, BE, B.Tech, BCA படித்தவரா நீங்கள்?

வேலூர் மக்களே! ஐடி துறையில் சாதிக்க விரும்புபவரா நீங்கள்? உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு இதோ. தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் கணினி அறிவியல், ஐடி துறையில் ஏதேனும் ஒரு டிகிரி படித்தவர்களுக்கு டெவலப்பர் பணிக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. மேலும், இதில் பயிற்சி முடித்தவர்களுக்கு முன்னணி தனியார் நிறுவனங்களில் உறுதியாக வேலை ஏற்படுத்தி தரப்படும். <
News September 18, 2025
வேலூர்: தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பவரா நீங்கள்?

வேலூர் மாவட்டத்தில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, அனைத்து பகுதிகளிளிலும் பட்டாசுகள் விற்பனை செய்ய விரும்பும் விற்பனையாளர்கள் & வணிகர்கள் நிபந்தனைகளின்படி உரிய ஆவணங்களுடன் “இ” சேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் வரும் அக்டோபர் 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.