News May 7, 2025
வேலூர்: கூலி தொழிலாளிக்கு ரூ.1.70 கோடி ஜிஎஸ்டி கட்ட நோட்டீஸ்

குடியாத்தம் வெள்ளேரியை சேர்ந்த கவிதா தனது கணவருடன் நேற்று எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்தார். அதில் ”நானும் எனது கணவரும் கூலி வேலைசெய்து வருகிறோம். எங்களுக்கு சொந்தமாக சென்னையில் நிறுவனம் இயங்கி வருவதாகவும், ரூ.1.70 கோடி ஜிஎஸ்டி கட்ட வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். அந்த நிறுவனத்துக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறினர்.
Similar News
News July 5, 2025
குழந்தை வரம் கொடுக்கும் மார்க்கபந்தீஸ்வரர்

வேலூரில் இருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில், பாலாற்றின் தென் கரையில் அமைந்துள்ளது விருஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயில். சோழ மன்னர்களால் கட்டப்பட்ட ஒரு பழமையான சிவன் கோயிலாகும். இங்குள்ள சிம்ம தீர்த்தத்தில் நீராடி, குழந்தை வரம் வேண்டி வரும் பெண்களுக்குக் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. திருமணம் ஆகாதவர்கள் மார்க்கபந்தீஸ்வரரையும், மரகதாம்பிகையையும் வணங்கி நலம் பெறலாம். ஷேர்
News July 5, 2025
பத்திரப்பதிவு துறையின் ஆன்லைன் போர்டல் பற்றி தெரிஞ்சிக்கோங்க!

நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் கவலையே வேண்டாம். தாலுகா அலுவலகம் செல்லாமலே வீட்டில் இருந்தபடியே <
News July 5, 2025
தொழிலாளர்களுக்கு ரூ.3,000 பென்ஷன் (1/2)

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்களை வழங்க மத்திய அரசு இ-ஷ்ரம் கார்டு வழங்கி வருகிறது. இதன் மூலம் மாதம் ரூ.3,000 பென்சன்/ ரூ.2 லட்சம் வரை விபத்து காப்பீடு பெற முடியும். <