News May 7, 2025
வேலூர்: கூலி தொழிலாளிக்கு ரூ.1.70 கோடி ஜிஎஸ்டி கட்ட நோட்டீஸ்

குடியாத்தம் வெள்ளேரியை சேர்ந்த கவிதா தனது கணவருடன் நேற்று எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்தார். அதில் ”நானும் எனது கணவரும் கூலி வேலைசெய்து வருகிறோம். எங்களுக்கு சொந்தமாக சென்னையில் நிறுவனம் இயங்கி வருவதாகவும், ரூ.1.70 கோடி ஜிஎஸ்டி கட்ட வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். அந்த நிறுவனத்துக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறினர்.
Similar News
News December 6, 2025
வேலூர்: துப்பாக்கி குண்டு பாய்ந்து பெண் பலி!

வேலூர்: தேவரிஷிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மனைவி ராமு (65), கடந்த 25ம் தேதி, வீட்டின் பின்பக்கத்தில் நின்றுகொண்டிருந்த போது, திடீரென அவருடைய வயிற்றில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. பின்னர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், 2 சிறுநீரகங்களும் செயல் இழந்ததால் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். தற்போது அவரை துப்பாக்கியால் சுட்டது யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 6, 2025
வேலூர்: சிறுமி 3 மாதம் கர்ப்பம்.. வாலிபர் மீது போக்சோ!

வேலூர்: காங்கேயநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (25). இவருக்கும், வேளூரைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. பின்னர், திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி நெருங்கி பழகியுள்ளார். இதனால் சிறுமி 3 மாதம் கர்ப்பமானார். இது குறித்து சிறுமியின் தயார் கொடுத்த புகாரின் பேரில், ஸ்ரீகாந்த் மீது போக்சோ வழக்கு பதிவு செய்தனர் போலீசார்.
News December 6, 2025
வேலூர்: குடும்ப பிரச்சனையால் பெண் விபரீத முடிவு!

கே.வி.குப்பம் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரின் மனைவி மணிமேகலை (50). இவர்களிடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் விரக்தியடைந்த மணிமேகலை, நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த கே.வி.குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மணிமேகலையின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.


