News April 10, 2025

வேலூர் காவல்துறை ரோந்து பணி விவரம்

image

வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு நேர ரோந்து பணி விவரம் இன்று (10-4-2025) வெளியிடப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் மக்களின் பாதுகாப்புக்காக மாவட்ட காவல்துறை இரவு நேரங்களில் ரோந்து பணி செய்து வருகின்றனர். இதனால் மக்களின் பாதுகாப்பு மற்றும் கொள்ளை சம்பவம் குறித்து புகார் அளிக்க மேற்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News November 28, 2025

வேலூர்: 9 பேர் பதவி உயர்வு.. டிஐஜி உத்தரவிட்டார்!

image

காவல் உதவி ஆய்வாளர்களாக 10 வருடத்துக்கு மேலாக பணியாற்றிய 9 பேர், பதவி உயர்வுடன் வேலூர் சரகத்தின் பல காவல் நிலையங்களுக்கு நியமிக்கப்பட்டனர். டிஜிபி வெங்கட்ராமனின் உத்தரவு அடிப்படையில், டிஐஜி தர்மராஜன் நியமனத்தை அறிவித்தார். காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்த அதிகாரிகள் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்ட காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

News November 28, 2025

வேலூர்: சிறப்பு ரயில்கள் இயக்கம்!

image

ஆந்திரா மாநிலம் திருப்பதியில் இருந்து வேலூர் மாவட்டம், காட்பாடி கன்ட்ரோல்மென்ட் மற்றும் திருவண்ணாமலை வழியாக ராமேஸ்வரத்திற்கு வாராந்திர ரயில் இயக்கப்படுகிறது. இந்த இரயில் (டிசம்பர் 2,3,9,10,11) தேதிகளில் சிறப்பு ரயிலாக இயக்கப்படுகிறது. இந்த வாராந்திர சிறப்பு இரயில் (06080) கார்த்திகை தீபத் திருவிழா மற்றும் ஆன்மீக பக்தர்கள் வசதிக்காக இந்த இரயில் இயக்கப்படுவதாக இரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

News November 28, 2025

வேலூர் பைக் திருட்டில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது

image

வேலூர் கொணவட்டத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன் தனியார் மருத்துவமனை ஊழியர். இவரது பைக் கடந்த 19-ம் தேதி தனது வீட்டின் அருகே நிறுத்தியிந்தார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது மர்ம நபர்கள் பைக்கை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வேலூர் வடக்கு போலீசார் பைக் திருடிய ஸ்ரீகாந்த் (22), ஜெய்கணேஷ் (22) பிரகாஷ் (18)  3 பேரை கைது செய்தனர். மேலும் 9 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!