News October 10, 2025

வேலூர்: கள்ளக்காதலால் கணவனை கொன்ற மனைவி

image

பள்ளிகொண்டா வெங்கடசாமி ரெட்டியூர் சேர்ந்த தேவேந்திரன் மர்ம நபர்களால் நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து பள்ளிகொண்டா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் தேவேந்திரன் மனைவி கலைவாணி அவருடைய கள்ளக்காதலன் அருண்குமார் (27) ஆகியோர் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தேவேந்திரனை சேர்ந்து கொலை செய்தது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் அவர்களை நேற்று கைது செய்தனர்.

Similar News

News December 8, 2025

வேலூர்: டிகிரி போதும், ரூ.35,400 சம்பளம்!

image

வேலூர் மக்களே, இந்தியன் இரயில்வே நிறுவனம் ஜூனியர் இன்ஜினியர்கள் பதவிக்கு 2,569 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு, டிப்ளமோ (அ) B.Sc பட்டப்படிப்பு முடித்தவர்கள் <>இங்கு க்ளிக் செய்து<<>>, வரும் டிச.10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும், இதற்கு ரூ.35,400 சம்பளமாக வழங்கப்படும். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News December 8, 2025

வேலூர்: முதல்வர் தலைமையில் ஆலோசனை!

image

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (டிச.8) காணொலிக் காட்சி வாயிலாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் வேலூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் கலந்துகொண்டு பேசினார். இந்த தொகுதி பொறுப்பாளர்கள், ஒன்றிய கழக, பகுதி கழக, பேரூர் கழக செயலாளர்கள், தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினரகள் பங்கேற்றனர்.

News December 8, 2025

வேலூர்: கலெக்டர் தலைமையில் மக்கள் குறை தீர்வு கூட்டம்!

image

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (டிச.8) நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவசுப்பிரமணியன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காஞ்சனா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!