News March 26, 2024

வேலூர் ஒரே நாளில் 13 பேர் வேட்புமனு தாக்கல்

image

மக்களவைத் தேர்தலில் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட இன்று (மார்ச் 26) ஒரே நாளில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர், சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 13 வேட்பாளர்கள் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான சுப்புலட்சுமியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதுவரை வேலூர் தொகுதியில் போட்டியிட 31 பேர் மனு தாக்கல் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News

News April 16, 2025

வேலூர் சிறையும் சுதந்திர போராட்டமும்

image

ஆங்கிலேயர் காலத்தில் அந்தமான் சிறைக்கு அடுத்தபடியாக கொடிய சிறையாக வேலூர் சிறை இருந்தது. 1830ல் தொடங்கப்பட்ட இங்கு விடுதலைப் போரில் பங்கெடுத்த வினோபாபாவே, இராஜாஜி, கர்மவீரர் காமராஜர் போன்ற தலைவர்களும், முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவும் சிறை வாசத்தை அனுபவித்தனர். விடுதலை போராட்டதிலிருந்து இன்று வரை செயல்பட்டு வரும் இந்த சிறை தற்போது புழல் சிறைக்கு அடுத்ததாக பார்க்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க

News April 16, 2025

வேலூர்: பிளஸ்-1 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி 

image

வேலூர் மாவட்டத்தில் நேற்று முதல் பிளஸ் 1 வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி வேலூர் சாய்நாதபுரம் கிருஷ்ணசாமி அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி மற்றும் குடியாத்தம் சேத்துவண்டை சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக்பள்ளியில் தொடங்கியது. இதில் முதன்மை தேர்வாளர்கள் மற்றும் கூர்ந்தாய்வாளர்கள் ஆகியோர் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுகின்றனர் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News April 16, 2025

ஜாக்கிரதை! ஒரு க்ளிக் உங்கள் வாழ்க்கையை மாற்றலாம்!

image

அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகளை நம்பி, அவற்றில் உள்ள எந்தவொரு இணையதள இணைப்பையும் (லிங்க்) கிளிக் செய்ய வேண்டாம். அவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி சார்ந்த தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது. சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க, 1930 என்ற எண்ணை அழையுங்கள். குழந்தைகள், பெரியவர்களிடம் செல்போனை கொடுக்கும் போது கனவமாக இருங்க. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!