News June 25, 2024
வேலூர் எம்.பி கதிர் ஆனந்த் பதவியேற்பு

வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் இன்று நாடாளுமன்ற எம்.பி-யாக பதவி ஏற்றுக்கொண்டார். நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
Similar News
News November 27, 2025
வேலூரில் அவலம் – விவரம் வெளிவந்தது!

ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டத்தில் உள்ள செங்கல் சூளையில், வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்த 13க்கும் மேற்பட்ட கொத்தடிமை தொழிலாளர்களை அதிகாரிகள் மீட்டனர். ஆனால், மாவட்ட நிர்வாகம் சார்பில் இதுவரை அந்த தொழிலாளர்களுக்கு உடனடி நிவாரணம், முழு மருத்துவ பரிசோதனை ஆகியவை செய்யப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து வேலுார் கலெக்டரிடம் மலைவாழ் மக்கள் சங்கத்தினர் இன்று (நவ.27) மனு அளித்துள்ளனர்.
News November 27, 2025
வேலூர் கலெக்டர் தலைமையில் ஆலோசனை!

இந்திய வானிலை ஆய்வு மையத்தால் வருகின்ற 29 மற்றும் 30 ஆகிய 2 தினங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தலைமையில் இன்று (நவ 27) ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில், துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
News November 27, 2025
வேலூரில் நாளை தொடங்கும் இலவச புத்தகக் காட்சி!

வேலூர், எத்திராஜ் மண்டபத்தில் புத்தகக் காட்சி நாளை நவ.28 முதல் தொடங்குகிறது. அனைத்து வயது மக்களும் பயன்படும் வகையில் பல்வேறு வகை நூல்கள், கல்வி, இலக்கியம், அறிவியல், குழந்தைகள் புத்தகங்கள் உள்ளிட்டவை காட்சிக்கு வைக்கப்பட உள்ளன. இவை, பொதுமக்கள் அனைவருக்கும் இலவசமாக நுழைந்து பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல நாள்கள் நடைபெறும் இக்காட்சிக்கு வாசகர்கள் கலந்துக்கொண்டு பயன்பெறவும்.


