News May 15, 2024

வேலூர்: உயர் கல்வியில் வழிகாட்டும் நிகழ்வு 

image

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் வேலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வேலூர் மாவட்டத்தில் 12ம் வகுப்பு பொது தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வியில் வழிகாட்டும் கல்லூரிக் கனவு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, இன்று விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் வருவாய் அலுவலர் மாலதி மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Similar News

News December 23, 2025

வேலூர்: வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு!

image

பள்ளிகொண்டா, சின்னசேரி கிராமத்திற்கு செல்லும் சாலையில் விவசாய நிலத்தில் பேபி (72) என்பவர் சொந்தமாக வீடு கட்டி தனது மகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று வீட்டில் மகன் இல்லாத நேரத்தில் மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து மூதாட்டியை தாக்கி விட்டு அவர் கழுத்தில் இருந்த 2 சவரன் தங்க நகையை பறித்து சென்றனர். மூதாட்டி கொடுத்த புகாரின் பேரில் பள்ளிகொண்டா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 23, 2025

வேலூர், வரும் 28-ம் தேதி இலவச கண் சிகிச்சை முகாம்

image

வேலூர் மாவட்ட வெல்லம் மண்டி வியாபாரிகள் சங்கம் மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து வரும் டிசம்பர் 28-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை காட்பாடி காந்தி நகரில் உள்ள ரங்காலயா திருமண மண்டபத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது. எனவே இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 22, 2025

வேலூர்: கால்வாயில் தவறி விழுந்த துப்புரவு பணியாளர் பலி!

image

வேலூர் சேனூர் பகுதியை சேர்ந்த சிவகுமார் என்பவர் சேனூர் பஞ்சாயத்தில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று அந்த பகுதியில் உள்ள ஒரு கால்வாயில் தவறி விழுந்தார். இதில் தலையில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த விருதம்பட்டு போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!