News May 15, 2024
வேலூர்: உயர் கல்வியில் வழிகாட்டும் நிகழ்வு

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் வேலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வேலூர் மாவட்டத்தில் 12ம் வகுப்பு பொது தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வியில் வழிகாட்டும் கல்லூரிக் கனவு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, இன்று விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் வருவாய் அலுவலர் மாலதி மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
Similar News
News November 23, 2025
வேலூர்: மத்திய சிறைக்குள் விழுந்த டிரோனால் பரபரப்பு!

வேலூர் தொரப்பாடியில் மத்திய ஆண்கள் சிறை அருகே மர்மநபர்கள் டிரோனை நேற்று பறக்க விட்டுள்ளனர். அப்போது திடீரென அந்த டிரோன் சிறை வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கோபுரத்தின் கீழ் விழுந்தது. அங்கு பணியில் இருந்த சிறை காவலர்கள் டிரோனை சிறை அலுவலர் சிவபெருமாளிடம் ஒப்படைத்தார். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, டிரோனை பறக்க விட்டவர்கள் யார்? என விசாரித்து வருகின்றனர்.
News November 23, 2025
குடியாத்தம்: கே.எம்.ஜி. கல்லூரியில் சிறப்பு கல்வி கடன் முகாம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டத்தில் கே.எம்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் (நவ.25) அன்று நடைபெற இருக்கும் சிறப்பு கல்விக்கடன் முகாமினை கல்லூரி பயிலும் மாணவ- மாணவிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று (நவ.22) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
News November 23, 2025
குடியாத்தம்: கே.எம்.ஜி. கல்லூரியில் சிறப்பு கல்வி கடன் முகாம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டத்தில் கே.எம்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் (நவ.25) அன்று நடைபெற இருக்கும் சிறப்பு கல்விக்கடன் முகாமினை கல்லூரி பயிலும் மாணவ- மாணவிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று (நவ.22) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


