News March 22, 2024

வேலூர்: ஆட்சியர் சொன்ன புதிய தகவல்

image

மக்களவைத் தோ்தலை முன்னிட்டு வேலூா் மாவட்டத்தில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், உரிய ஆவணமின்றி எடுத்துவரப்பட்டதாக காட்பாடியில் ரூ.9,49,500, அணைக்கட்டில் ரூ.5,89,500, குடியாத்தத்தில் ரூ.5,12,200, வேலூரில் ரூ.5,03,790, கே.வி.குப்பத்தில் ரூ.4,05,950 என மொத்தம் ரூ.29,60,940 பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.

Similar News

News April 10, 2025

வேலூர் காவல்துறை ரோந்து பணி விவரம்

image

வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு நேர ரோந்து பணி விவரம் இன்று (10-4-2025) வெளியிடப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் மக்களின் பாதுகாப்புக்காக மாவட்ட காவல்துறை இரவு நேரங்களில் ரோந்து பணி செய்து வருகின்றனர். இதனால் மக்களின் பாதுகாப்பு மற்றும் கொள்ளை சம்பவம் குறித்து புகார் அளிக்க மேற்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்.

News April 10, 2025

வேலூர் மாவட்டத்தில் 292 பணியிடங்கள் அறிவிப்பு

image

வேலூர் மாவட்ட பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 292 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளன. பணியிடங்களின் எண்ணிக்கை, அந்தந்த வட்டார அலுவலகங்களில் தகவல் பலகையில் ஒட்டப்படும். 18-40 வயதுடைய 10th பாஸ்/ஃபெயில் ஆன பெண்கள் பிடிஓ அலுவலகம், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் ஏப்.26 மாலைக்குள் விண்ணப்பிக்கலாம். *செம வாய்ப்பு. தெரிந்த 18-40 வயது பெண்களுக்கு பகிரவும்*

News April 10, 2025

வேலூர் மாவட்ட வன அலுவலர் இடமாற்றம்

image

வேலூர் மாவட்டத்தில் மாவட்ட வன அலுவலராக குருசாமி தபேலா பணியாற்றி வந்தார். இவர் சென்னையில் உள்ள பசுமை தமிழ்நாடு திட்ட அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து அவருக்கு பதிலாக வேலூர் மாவட்ட வன அலுவலராக ஊட்டி டேன்-டீ நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த அசோக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!