News March 21, 2024

வேலூர் அருகே போதை சாக்லேட் விற்பனை: 2 பேர் கைது

image

வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் போதை சாக்லேட் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நேற்று (மார்ச் 20) அந்தப் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது  பீகார் மாநிலத்தை சேர்ந்த குஞ்சன் குமார் (21), மணீஷ் குமார் (21) இருவரும் போதை சாக்லெட்  விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Similar News

News December 14, 2025

வேலூர் ‘ரெட் ஜோன்’ ஆக அறிவிப்பு!

image

வேலூர் மாவட்டம், அரியூர் இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, வரும் 17-ம் தேதி வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோயிலுக்கு வருகை தர உள்ளார். இதனை முன்னிட்டு, பொற்கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு, ‘ரெட் ஜோன்’ ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வருகிற டிச-17ஆம் தேதி ஸ்ரீபுரம் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

News December 14, 2025

வேலூர்: பொருட்களை வாங்கும் முன் இத தெரிஞ்சிக்கோங்க!

image

கடையில் வாங்கிய பொருட்களை உரிமையாளர் மாற்றி தரவோ (அ) பணத்தை திரும்ப தரவில்லை என்றாலோ நுகவோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புகார் அளிக்கலாம். வாங்கிய பொருட்களை 15 நாட்களுக்குள் எந்தவித சேதாரமும் இல்லாமல், வாங்கிய போது உள்ள நிலையில் இருந்தால் அதை கண்டிப்பாக மாற்றியோ (அ) பணத்தை திரும்ப தரவோ வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை (044-28589055) தொடர்பு கொள்ளலாம்.ஷேர் பண்ணுங்க

News December 14, 2025

வேலூர்: இலவச தையல் இயந்திரம் APPLY லிங்க்!

image

வேலூர் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு.
1. <>இங்கு கிளிக்<<>> செய்து பயனாளர் உள்நுழைவில் புதிய ID உருவாக்கவும். 2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும். 3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க. (வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!

error: Content is protected !!