News March 25, 2025
வேலூர் அருகே பிளஸ்-1 மாணவன் தற்கொலை

குடியாத்தம் செட்டிகுப்பம் பகுதியை சேர்ந்த ரஜினியின் மகன் லிங்கேஸ்வரன்(17). இவர் அதே பகுதியில் தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த லிங்கேஸ்வரன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த குடியாத்தம் கிராமிய போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News September 18, 2025
வேலூர் ஆட்சியர் பயிற்சி வகுப்புகள் குறித்து அறிவிப்பு

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கப்படுகிறது. தற்போது தாட்கோ, தனியார் நிறுவனத்துடன் இணைந்து அழகுக்கலை, சிகை அலங்கார பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதை பெற (www.tahdco.com) என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
News September 18, 2025
வேலூர்: B.Sc, BE, B.Tech, BCA படித்தவரா நீங்கள்?

வேலூர் மக்களே! ஐடி துறையில் சாதிக்க விரும்புபவரா நீங்கள்? உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு இதோ. தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் கணினி அறிவியல், ஐடி துறையில் ஏதேனும் ஒரு டிகிரி படித்தவர்களுக்கு டெவலப்பர் பணிக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. மேலும், இதில் பயிற்சி முடித்தவர்களுக்கு முன்னணி தனியார் நிறுவனங்களில் உறுதியாக வேலை ஏற்படுத்தி தரப்படும். <
News September 18, 2025
வேலூர்: தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பவரா நீங்கள்?

வேலூர் மாவட்டத்தில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, அனைத்து பகுதிகளிளிலும் பட்டாசுகள் விற்பனை செய்ய விரும்பும் விற்பனையாளர்கள் & வணிகர்கள் நிபந்தனைகளின்படி உரிய ஆவணங்களுடன் “இ” சேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் வரும் அக்டோபர் 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.