News March 25, 2025
வேலூர் அருகே பிளஸ்-1 மாணவன் தற்கொலை

குடியாத்தம் செட்டிகுப்பம் பகுதியை சேர்ந்த ரஜினியின் மகன் லிங்கேஸ்வரன்(17). இவர் அதே பகுதியில் தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த லிங்கேஸ்வரன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த குடியாத்தம் கிராமிய போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News April 10, 2025
வேலூர் இரவு நேர ரோந்து பணி விவரம்

வேலூர் மாவட்டத்தில் முக்கிய நகரங்கள் மற்றும் பல்வேறு இடங்களில் மாவட்ட காவல்துறை அதிகாரிகளின் இரவு நேர ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. பொது மக்கள் மற்றும் இரவு நேரங்களில் வேலைக்கு செல்வோர் இரவு நேரத்தில் சந்திக்கும் பிரச்சினை தொடர்பாக கொடுக்கப்பட்ட எண்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 9, 2025
வேலூர்: பல கஷ்டங்களை நீக்கும் கால பைரவர்

வேலூர் மாவட்டம் செங்காநத்தம் மலையில் காலபைரவர் கோவில் அமைந்துள்ளது. இங்கு 10 கைகளுடன் 3 1/2 அடி உயரத்தில் பைரவர் அருள்பாலிக்கிறார். மிகவும் சக்திவாய்ந்த இந்த கோவிலில் அஷ்டமி நாளில் வழிபட்டால் திருமண தடை நீங்கும் மற்றும் குழந்தை வரம் கிடைக்கும். மேலும், 108 ஒரு ரூபாய் நாணயத்தால் அபிஷேகம் செய்தால் பணக்கஷ்டம் மற்றும் இழந்த செல்வத்தை மீட்கலாம் என்பது ஐதீகம். *கடனில் சிக்கியவர்களுக்கு பகிரவும்*
News April 9, 2025
வேலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் விடுமுறை

வேலூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஹோட்டல்களில் உள்ள மதுபான பார்களுக்கு வரும் ஏப்.10 அன்று மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும் மது பானங்கள் விற்பனை செய்யக்கூடாது. மீறி விற்பனை செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சுப்புலட்சுமி இன்று தெரிவித்துள்ளார்.