News March 25, 2025
வேலூர் அருகே பிளஸ்-1 மாணவன் தற்கொலை

குடியாத்தம் செட்டிகுப்பம் பகுதியை சேர்ந்த ரஜினியின் மகன் லிங்கேஸ்வரன்(17). இவர் அதே பகுதியில் தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த லிங்கேஸ்வரன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த குடியாத்தம் கிராமிய போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News August 11, 2025
வேலூர் மாவட்ட பொது சுகாதார துறையில் வேலை

வேலூர் மாவட்ட பொது சுகாதாரத்துறையில் 22 காலிப் பணியிடங்கள் உள்ளன. செவிலியர், லேப் டெக்னீஷியன், சமூக சேவகர், பணியாளர், மருந்தாளர் உள்ளிட்ட பணியிடங்கள் உள்ளன. ரூ.23,000 வரை சம்பளம் வழங்கப்படும். 8, 10, 12, டிப்ளமோ, டிகிரி, நர்சிங் படித்தவர்கள் இன்றைக்குள் (ஆகஸ்ட் 11) இந்த <
News August 11, 2025
வேலூர் மாவட்ட பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் கவனத்திற்கு…

வேலூா் அரசு அருங்காட்சியகத்தில் வரும் 17ஆம் தேதி மாவட்ட அளவிலான ஓவியப்போட்டி நடைபெற உள்ளது. 1 – 3ஆம் வகுப்புக்கு சூரிய உதயம், 4 – 6ஆம் வகுப்புக்கு இயற்கை காட்சி, 7 – 9ஆம் வகுப்புக்கு தேசிய பெண் தலைவா்கள், 10 – +2 வகுப்புக்கு தேசிய ஆண் தலைவா்கள் ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன. முன்பதிவுக்கு 76675-80831, 94438-85207 எண்களில் தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க. பரிசுகளை அள்ளுங்க.
News August 11, 2025
வேலூர் மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் பட்டியல்

வேலூர் மாவட்டத்தில் இன்று (ஆக.11) நள்ளிரவு முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடவுள்ள காவலர்களின் பட்டியலை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் தங்களின் அவசர தேவைக்கு அவர்களை அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவில் காவல்துறை உதவி தேவைப்படும் நபர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கோ, அல்லது 100-க்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.