News August 26, 2024
வேலூர் அருகே தங்க நகையை மீட்ட சைபர் கிரைம் போலீசார்

காட்பாடி பகுதியை சேர்ந்த பட்டதாரி பெண் ஒருவரிடம் WhatsApp மூலம் பேசி வந்த நபர் ஒருவர், தங்களுக்கு பரிசு பொருட்கள் விழுந்துள்ளதாக கூறி அந்த பெண்ணிடம் இருந்து 3.5 சவரன் தங்க நகையை ஏமாற்றி உள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில் வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் தங்க நகையை மீட்டு இன்று ( ஆகஸ்ட் 26 ) வேலூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் உரியவரிடம் ஒப்படைத்தனர்.
Similar News
News November 27, 2025
வேலூர் கலெக்டர் தலைமையில் ஆலோசனை!

இந்திய வானிலை ஆய்வு மையத்தால் வருகின்ற 29 மற்றும் 30 ஆகிய 2 தினங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தலைமையில் இன்று (நவ 27) ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில், துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
News November 27, 2025
வேலூரில் நாளை தொடங்கும் இலவச புத்தகக் காட்சி!

வேலூர், எத்திராஜ் மண்டபத்தில் புத்தகக் காட்சி நாளை நவ.28 முதல் தொடங்குகிறது. அனைத்து வயது மக்களும் பயன்படும் வகையில் பல்வேறு வகை நூல்கள், கல்வி, இலக்கியம், அறிவியல், குழந்தைகள் புத்தகங்கள் உள்ளிட்டவை காட்சிக்கு வைக்கப்பட உள்ளன. இவை, பொதுமக்கள் அனைவருக்கும் இலவசமாக நுழைந்து பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல நாள்கள் நடைபெறும் இக்காட்சிக்கு வாசகர்கள் கலந்துக்கொண்டு பயன்பெறவும்.
News November 27, 2025
வேலூர்: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

வேலூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <


