News August 26, 2024

வேலூர் அருகே தங்க நகையை மீட்ட சைபர் கிரைம் போலீசார்

image

காட்பாடி பகுதியை சேர்ந்த பட்டதாரி பெண் ஒருவரிடம் WhatsApp மூலம் பேசி வந்த நபர் ஒருவர், தங்களுக்கு பரிசு பொருட்கள் விழுந்துள்ளதாக கூறி அந்த பெண்ணிடம் இருந்து 3.5 சவரன் தங்க நகையை ஏமாற்றி உள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில் வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் தங்க நகையை மீட்டு இன்று ( ஆகஸ்ட் 26 ) வேலூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் உரியவரிடம் ஒப்படைத்தனர்.

Similar News

News November 28, 2025

வேலூர்: சற்று நேரத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்!

image

வேலூர் மாவட்டத்தில் நவம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் இன்று நவம்பர் 28-ம் தேதி காலை 10 மணியளவில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற உள்ளது. இதில், அரசு அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே 
வேலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை தெரிவித்து பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 28, 2025

வேலூர்: அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு!

image

வேலூர், பள்ளிகொண்டா அருகே கூத்தம்பாக்கம் சர்வீஸ் சாலையில் உள்ள மழைநீர் கால்வாயில் அழுகிய நிலையில் பெண் சடலம் கிடப்பதாக, பள்ளிகொண்டா போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார், தடய அறிவியல் ஆய்வாளர்களுடன் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது பெண்ணின் உடல் எலும்புக்கூடாக இருந்தது. பின் பிரேதப் பரி சோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News November 28, 2025

வேலூர்: அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு!

image

வேலூர், பள்ளிகொண்டா அருகே கூத்தம்பாக்கம் சர்வீஸ் சாலையில் உள்ள மழைநீர் கால்வாயில் அழுகிய நிலையில் பெண் சடலம் கிடப்பதாக, பள்ளிகொண்டா போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார், தடய அறிவியல் ஆய்வாளர்களுடன் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது பெண்ணின் உடல் எலும்புக்கூடாக இருந்தது. பின் பிரேதப் பரி சோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!