News August 26, 2024
வேலூர் அருகே தங்க நகையை மீட்ட சைபர் கிரைம் போலீசார்

காட்பாடி பகுதியை சேர்ந்த பட்டதாரி பெண் ஒருவரிடம் WhatsApp மூலம் பேசி வந்த நபர் ஒருவர், தங்களுக்கு பரிசு பொருட்கள் விழுந்துள்ளதாக கூறி அந்த பெண்ணிடம் இருந்து 3.5 சவரன் தங்க நகையை ஏமாற்றி உள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில் வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் தங்க நகையை மீட்டு இன்று ( ஆகஸ்ட் 26 ) வேலூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் உரியவரிடம் ஒப்படைத்தனர்.
Similar News
News November 21, 2025
வேலூர்: உள்ளாடையுடன் சில்மிஷம் செய்த நபர் கைது!

வேலூர் மாவட்டம், காட்பாடி பகுதியை சேர்ந்தவர் சுனில் குமார்(23). இவர் மது அருந்திவிட்டு கடந்த 18ஆம் தேதி இரவு உள்ளாடையுடன் தெருக்களில் சுற்றித்திரிந்துள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த 35 வயது பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அந்தப் பெண் காட்பாடி போலீசில் புகார் அளித்த நிலையில், நேற்று (நவ.20) அவர் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News November 21, 2025
வேலூர்: 10th முடித்தால் உளவுத்துறையில் வேலை ரெடி!

வேலூர் மக்களே, மத்திய உளவுத் துறையில் காலியாக உள்ள 362 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 – 25 வயதிற்குட்ப்பட்டவர்கள் நவ. 22ம் தேதி முதல் டிச. 14க்குள் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்து தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும். ரூ.18,000 – ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு<
News November 21, 2025
வேலூர்: பணம் கேட்டு மிரட்டிய முன்னாள் காதலி!

வேலூர்: சலவன்பேட்டையைச் சேர்ந்த இசைக்கலைஞர் (38), 2008ல் கல்லூரி படிக்கும் போது பெண் ஒருவருடன் பழகி வந்துள்ளார். அப்போது அந்த பெண் கர்ப்பமடைந்தது வீட்டாருக்கு தெரிந்த நிலையில், 2 பேரையும் பிரித்து, வேறு திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில், தற்போது அந்த பெண், இசை கலைஞருக்கு ரூ.7 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து, அந்நபர் நேற்று (நவ.20) பாகாயம் போலீசில் புகார் அளித்துள்ளார்.


