News March 27, 2025

வேலூர் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் கைது

image

வேலூர் மேட்டு இடையம்பட்டி பகுதியில் சூதாட்டம் நடப்பதாக வந்த தகவலின் பேரில்,பாகாயம் போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த கார்த்தி (44), சுரேஷ் (42), ஜெகதீசன் (33), ஜெய் சங்கர் (54), ராஜி (50), ரவி (50), தினேஷ் குமார் (30), முத்து (46), நாராயணன் (50), சந்தோஷ் (29), பாபு (68), சத்தியமூர்த்தி (30), செல்வம் (43) ஆகிய 13 பேரை கைது செய்தனர். மேலும் ரூ.60 ஆயிரம், 5 பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Similar News

News April 17, 2025

வேலை தேடும் வேலூர் இளைஞர்கள் கவனத்திற்கு

image

வேலை தேடும் இளைஞர்களுக்கு முதல் சவாலே எங்கு வேலை உள்ளது என்பதை தெரிந்து கொள்வது தான். வேலை தேடும் இளைஞர்களுக்கு உதவிடும் வகையில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மூலம் https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் மாவட்ட வாரியாக தனியார் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை அறிந்து கொள்ள முடியும். வேலை தேடும் உங்க நண்பருக்கு ஷேர் பண்ணி ஹெல்ப் பண்ணுங்க

News April 17, 2025

அங்கன்வாடி பணி: விண்ணப்பிப்பது எப்படி?

image

வேலூரில், 379 அங்கன்வாடி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள், இந்த <>லிங்கை <<>>க்ளிக் செய்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து, வரும் 23ஆம் தேதிக்குள் தங்களது வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். கணவனை இழந்த அல்லது ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 18 – 40 வயதுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம். ஷேர் செய்யுங்கள்

News April 17, 2025

மாடு விடும் விழாவில் 10 பேர் படுகாயம்

image

கே.வி.குப்பம் சோழமூர் ஊராட்சி ராமாபுரம் கிராமத்தில், நேற்று (ஏப்ரல் 16) மாடு விடும் விழா நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து 150க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்றன. வாடிவாசலில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக கட்டவிழ்த்து விடப்பட்டன. குறிப்பிட்ட இலக்கை விரைவாக அடைந்து வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில், மாடுகள் முட்டியதில் 10 பேர் படுகாயமடைந்தனர்.

error: Content is protected !!