News August 8, 2024

வேலூருக்கு ரேஷன் பொருட்கள் வருகை   

image

1,250 டன் புழுங்கல் அரிசி திருவாரூர் மாவட்டத்தில் இருந்து இன்று (ஆகஸ்ட் 8) காலை காட்பாடிக்கு ரெயிலில் வந்தடைந்தது. இங்கிருந்து லாரிகள் மூலம் வேலூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இம்மாதத்திற்கான பாமாயில், துவரம் பருப்பு ஆகியவற்றை ரேஷன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News

News December 20, 2025

வேலூர்: விவசாயிகளுக்கு ரூ.31,500 மானியம்!

image

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.31,500 மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் நபர்கள் <>இங்கு க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். அல்லது தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் அலுவலத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். உடனே ஷேர் பண்ணுங்க!

News December 20, 2025

வேலூரில் பைக்குகள் தொடர் திருட்டு!

image

வேலூர் கொணவட்டம் அப்துல்ஷாகிப் தெருவை சேர்ந்தவர் அன்சார் (35). இவர், வீட்டு வாசலில் தனது பைக்கை நிறுத்தி இருந்தார். நேற்று வந்து பார்த்த போது பைக்கை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவரது மற்றொரு பைக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருட்டு போனது குறிப்பிடத்தக்கது.

News December 20, 2025

காட்பாடி: நடந்து சென்ற மூதாட்டியிடம் 2 பவுன் திருட்டு!

image

காட்பாடி பிரம்மபுரம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் இந்திரா (58). இவர் நேற்று முன்தினம் வள்ளிமலை செல்லும் சாலையில் நடந்து சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள், இந்திரா அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை கழுத்தில் இருந்து பறித்து சென்றனர். இதுகுறித்து இந்திரா காட்பாடி போலீசில் நேற்று புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!