News September 14, 2024
வேலூரில் TNPSC தேர்வுக்கு 3464 பேர் ஆப்சென்ட்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 2, குரூப் 2 ‘ஏ’ பணியில் காலியாக உள்ள 2,327 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு இன்று (செப்டம்பர் 14) நடந்தது. வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 48 மையங்களில் குரூப்2, குரூப் 2ஏ தேர்வை 13139 பேர் எழுத விண்ணப்பித்து இருந்தனர். இதில் 9675 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். மீதமுள்ள 3464 தேர்வு எழுதாமல் ஆப்சென்ட் ஆகியுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News December 5, 2025
வேலூர்: சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ!

வேலூரை அடுத்த அரியூர் பகுதியை சேர்ந்த 18 வயது வாலிபர் 17 வயது சிறுமியை காதலித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் 17 வயது சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாக அரசு மருத்துவர்கள் அரியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அந்த வாலிபர் மீது நேற்று (டிச.4) போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 5, 2025
வேலூர்: அரசு பேருந்து ஓட்டுனரை தாக்கிய மர்ம நபர்!

வேலூர்: குடியாத்தம் அருகே, பாண்டிச்சேரியில் இருந்து வந்த அரசு பேருந்தை ஓட்டிச் சென்ற முரளி (50) என்பவர், காட்பாடி நான்கு முனை கூட்ரோடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபரால் தாக்கப்பட்டார். காயமடைந்த ஓட்டுநர் முரளி குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து உதயகுமார் (25) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 5, 2025
வேலூர் மாவட்ட இரவு ரோந்துப் பணி விவரம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி இன்று (டிச.4) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது.


