News September 14, 2024
வேலூரில் 20 துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாற்றம்

வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையில் பணிபுரிந்து வரும் 20 துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதைத்தவிர 7 ஊராட்சி ஒன்றிய உதவியாளர்கள் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கலெக்டர் சுப்புலெட்சுமி பிறப்பித்துள்ளார்.
Similar News
News December 1, 2025
வேலூர்: போதை மாத்திரைகளை விற்ற 5 பேர் கைது!

வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக வடக்கு போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு போதை மாத்திரைகளை விற்க முயன்ற சந்துரு (24), லோகேஷ் (22), விக்னேஷ் (24), சூர்யா (36), தினேஷ் (31) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 400 போதை மாத்திரைகள் 40 ஊசிகள் பறிமுதல் செய்தனர்.
News December 1, 2025
வேலூர் அஞ்சல் தலை கண்காட்சி அதிகாரிகள் தகவல்!

வேலூர் அஞ்சல் கோட்டம் சார்பாக மாவட்ட அளவிலான அஞ்சல் தலை கண்காட்சி வரும் டிச.12, 13 ஆகிய தேதிகளில் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள தண்டபாணி திருமண மஹாலில் நடைபெற உள்ளது. இதில் அஞ்சல் தலைகள், சிறப்பு உரைகள் வெளியீடு, வினாடி வினா, கடிதம் எழுதுதல் போன்ற போட்டிகள் நடைபெற உள்ளன. எனவே குழந்தைகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இதில் பங்கேற்று பயன்பெறுமாறு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News December 1, 2025
வேலூர்: 2,147 செவிலியர் பணியிடங்கள்.. நேர்காணல் இல்லை!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2,417 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18 வயது நிறைவடைந்த பெண்கள் இதற்கு விண்பிக்கலாம். இந்த பணிக்கு நேர்காணல் கிடையாது. மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்கப்படும். மேலும், மாதம் ரூ.19,500 – ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <


