News August 10, 2024
வேலூரில் 108 ஆம்புலன்ஸ் பணிக்கு நேர்காணல் தேர்வு

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மாவட்டங்களில் 108 ஆம்புலன்ஸில் காலியாக உள்ள மருத்துவ உதவியாளர், டிரைவர் பணிக்கான நேர்காணல் இன்று ( ஆகஸ்ட் 10 ) நடந்தது. இதில் 3 மாவட்டங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு விரைவில் பணி ஆணை வழங்கப்பட உள்ளது.
Similar News
News December 17, 2025
வேலூர்: உங்களிடம் ரேஷன் அட்டை உள்ளதா?

வேலூர் மக்களே! ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.
News December 17, 2025
குடியாத்தம் தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம்!

குடியாத்தம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் நாளை டிச.18 காலை 11 மணியளவில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் ஆர்டிஓ சுபலட்சுமி தலைமையில் நடைபெற உள்ளது. இதில் பல துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். எனவே, குடியாத்தம், கே.வி.குப்பம், பேரணாம்பட்டு ஆகிய தாலுகாக்களை சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதி நிதிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகள் தெரிவிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News December 17, 2025
ஜனாதிபதி முர்முவை வரவேற்ற வேலூர் கலெக்டர்!

ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது சுற்றுப்பயணத்தை நேற்று முதல் தொடங்கி, வருகிற 22-ந் தேதி வரை கர்நாடகா, தமிழ்நாடு, தெலுங்கானா மாநிலங்களில் மேற்கொள்கிறார். இந்நிலையில் இன்று (டிச.17) திருப்பதி ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோவிலுக்கு 11:30 மணிக்கு வருகை தந்தார். அவரை வேலூர் கலெக்டர் சுப்புலெட்சுமி, பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.


