News August 24, 2024
வேலூரில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் வருகிற 31-ந் தேதி ஓட்டேரி முத்துரங்கம் அரசு கலை கல்லூரியில் நடைபெற உள்ளது. இதில் 100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்கிறது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News November 18, 2025
வேலூரில் ரூ.1.6 கோடி மோசடி – அதிர்ச்சியூட்டும் தகவல்கள்!

வேலூரில், கடந்த நவ.1ம் தேதி முதல் நவ.15ம் தேதி வரை, பகுதி நேர வேலை, பங்குச்சந்தை முதலீடு போன்ற பெயர்களில் ரூ.1.60 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து 162 புகார்கள் பெறப்பட்டுள்ள நிலையில், ரூ.11.25 லட்சம் தொகையை மட்டுமே சைபர் குற்றப்பிரிவு போலீஸார் மீட்டுள்ளனர். மேலும், இது போன்ற மோசடிகளில் படித்தவர்களே எளிதாக சிக்குகிறார்கள் என சைபர் குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.
News November 18, 2025
வேலூரில் ரூ.1.6 கோடி மோசடி – அதிர்ச்சியூட்டும் தகவல்கள்!

வேலூரில், கடந்த நவ.1ம் தேதி முதல் நவ.15ம் தேதி வரை, பகுதி நேர வேலை, பங்குச்சந்தை முதலீடு போன்ற பெயர்களில் ரூ.1.60 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து 162 புகார்கள் பெறப்பட்டுள்ள நிலையில், ரூ.11.25 லட்சம் தொகையை மட்டுமே சைபர் குற்றப்பிரிவு போலீஸார் மீட்டுள்ளனர். மேலும், இது போன்ற மோசடிகளில் படித்தவர்களே எளிதாக சிக்குகிறார்கள் என சைபர் குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.
News November 18, 2025
வேலூர்: கண்மூடித்தனமாக தாக்கிய கணவன் – மனைவி பலி!

வேலூர்: முள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்த மணிக்கும் (32), சாந்திக்கும் (28) திருமணமாகி 10 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு 1 மகன், 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், நேற்று (17) நடைபெற்ற வாக்குவாதத்தில், சாந்தியை மணி கல், கட்டை மற்றும் கம்பியால் தாக்கியள்ளார். இதில் படுகாயமடைந்த சாந்தி மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். தகவலறிந்த வேலூர் வடக்கு போலீஸார், வழக்குப்பதிவு செய்து மணியை கைது செய்தனர்.


