News August 27, 2024

வேலூரில் போக்சோ வழக்கில் கைதானவருக்கு குண்டாஸ்

image

வேலூர் மாவட்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கில் கைதாகி சிறையிலுள்ள சரவணன் (41) என்பவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்பி மதிவாணன் மாவாட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளார். அதன் பேரில் நேற்று (ஆகஸ்ட் 26) சரவணனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் சுப்புலட்சுமி உத்தரவிட்டார்.

Similar News

News December 5, 2025

வேலூர்: ஆன்லைன் மோசடி-ரூ.26 லட்சத்தை பறிகொடுத்த பெண்!

image

வேலூரை சேர்ந்த 35 வயது பெண்ணின் செல்போனுக்கு பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஒரு லிங்க் வந்துள்ளது. இதை உண்மை என நம்பிய அவர் போலியான பங்கு சந்தை வெப்சைட்டில் 26 லட்சம் செலுத்தி உள்ளார். அவர் செலுத்திய பணத்துக்கு கிடைத்த லாபத்தை எடுக்க முயன்ற போது எடுக்க முடியவில்லை. இதுகுறித்து பெண் ஆன்லைன் மூலம் அளித்த புகாரின் பேரில் வேலூர் சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 5, 2025

வேலூர்: சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ!

image

வேலூரை அடுத்த அரியூர் பகுதியை சேர்ந்த 18 வயது வாலிபர் 17 வயது சிறுமியை காதலித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் 17 வயது சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாக அரசு மருத்துவர்கள் அரியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அந்த வாலிபர் மீது நேற்று (டிச.4) போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 5, 2025

வேலூர்: அரசு பேருந்து ஓட்டுனரை தாக்கிய மர்ம நபர்!

image

வேலூர்: குடியாத்தம் அருகே, பாண்டிச்சேரியில் இருந்து வந்த அரசு பேருந்தை ஓட்டிச் சென்ற முரளி (50) என்பவர், காட்பாடி நான்கு முனை கூட்ரோடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபரால் தாக்கப்பட்டார். காயமடைந்த ஓட்டுநர் முரளி குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து உதயகுமார் (25) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!