News January 24, 2025
வேலூரில் பட்டப்பகலில் வாலிபர் வெட்டிக்கொலை

சத்துவாச்சாரியைச் சேர்ந்த செல்வகுமார்(38), இன்று காலை 11 மணியளவில் சேண்பாக்கம், ராகவேந்திரா கோவில் பின்புறம் உள்ள சாலையில் பைக்கில் சென்று கொண்டு இருந்தார். அப்போது செல்வகுமாரை பின் தொடர்ந்து வந்த மர்மநபர்கள், செல்வகுமாரை பைக்கில் இருந்து கீழே தள்ளி கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பியோடினர். இதுகுறித்து தகவலறிந்த வடக்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 17, 2025
ஜனாதிபதிக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு!

வேலூர் மாவட்டம் அரியூரில் உள்ள ஸ்ரீபுரம் தங்க கோயிலுக்கு இன்று (டிச.17) வருகை தந்த இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு பொற்கோயில் சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பின் போது தமிழக கவர்னர் ஆர்.என். ரவி, மத்திய இணை அமைச்சர் முருகன், தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
News December 17, 2025
வேலூரில் ஜனாதிபதிக்கு வரவேற்பு!

இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று(டிச.16) தொடங்கி வருகிற 22-ந் தேதி வரை கர்நாடகா, தமிழ்நாடு, தெலுங்கானா மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்நிலையில், இன்று(டிச.1&) காலை திருப்பதி ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டரில் ஸ்ரீபுரம் தங்க கோயிலுக்கு வந்தார். அவரை தமிழக அரசின் சார்பில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி வரவேற்றார்.
News December 17, 2025
வேலூரில் இலவச வக்கீல் சேவை!

வேலூர் மக்களே.., நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. அதன் மூலம் எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். 1) மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0416-2255599 2) தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 3) Toll Free 1800 4252 441 4) சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 5) உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!


