News August 14, 2024

வேலூரில் தேசிய பெண் குழந்தை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

image

தேசிய பெண் குழந்தை தினத்தை முன்னிட்டு சமூக முன்னேற்றத்துக்கு சிறந்த சேவை, வீரதீர செயல்புரிந்த 13-18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு தேசிய பெண் குழந்தை விருதும், மாநில அரசின் சார்பில் 1 லட்சத்துக்கு காசோலை வழங்கப்படும். எனவே தகுதியானவர்கள் http:// awards.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.

Similar News

News November 20, 2025

மறைந்த துணை மேயரின் தந்தை உடலுக்கு அமைச்சர் மரியாதை!

image

வேலூர் மாநகர தெற்கு பகுதி செயலாளரும், மாநகராட்சி துணை மேயருமான சுனில்குமாரின் தந்தை மாணிக்கம் உடல் நலம் குறைவால் இறந்தார். அவரது உடலுக்கு இன்று (நவ. 20) பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், மாநகராட்சி மேயர் சுஜாதா உட்பட பலர் உடன் இருந்தனர்.

News November 20, 2025

வேலூர்: ஒரே நாளில் 17 பேர் மீது வழக்கு பதிவு!

image

வேலூர், ஏரியூரில் உள்ள திறந்த வெளிமைதானத்தில், நேற்றிரவு அதே பகுதியை சேர்ந்த வாலிபர்கள் மற்றும் அலமேலுமங்காபுரத்தை சேர்ந்த வாலிபர்கள் தனித்தனியாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கியதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் சத்துவாச்சாரி போலீசார் இருதரப்பை சேர்ந்த 17 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News November 20, 2025

வேலூர் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் ஒத்தி வைப்பு!

image

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை (நவ.21) நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நிர்வாக காரணங்களை முன்னிட்டு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று (நவ.20) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!