News March 25, 2025
வேலூரில் உயர்கல்வி மாபெரும் கருத்தரங்கு

வேலூர் மாவட்டத்தில் உள்ள நேதாஜி ஸ்டேடியத்தில் ஏப்ரல் 12,13 ஆகிய தேதிகளில் வழிகாட்டி உயர்கல்வி கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற உள்ளது. இதில் 10,12 வகுப்பு முடித்த மாணவர்கள் எங்கு படிக்கலாம் என்ன படிக்கலாம் என்று ஆலோசனை வழங்க உள்ளனர். இந்த அறிய வாய்ப்பை வேலூர் மாவட்ட மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் விஐடி வேந்தர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சைலேந்திரபாபு கலந்து கொள்ளனர்.
Similar News
News December 6, 2025
வேலூர்: துப்பாக்கி குண்டு பாய்ந்து பெண் பலி!

வேலூர்: தேவரிஷிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மனைவி ராமு (65), கடந்த 25ம் தேதி, வீட்டின் பின்பக்கத்தில் நின்றுகொண்டிருந்த போது, திடீரென அவருடைய வயிற்றில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. பின்னர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், 2 சிறுநீரகங்களும் செயல் இழந்ததால் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். தற்போது அவரை துப்பாக்கியால் சுட்டது யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 6, 2025
வேலூர்: சிறுமி 3 மாதம் கர்ப்பம்.. வாலிபர் மீது போக்சோ!

வேலூர்: காங்கேயநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (25). இவருக்கும், வேளூரைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. பின்னர், திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி நெருங்கி பழகியுள்ளார். இதனால் சிறுமி 3 மாதம் கர்ப்பமானார். இது குறித்து சிறுமியின் தயார் கொடுத்த புகாரின் பேரில், ஸ்ரீகாந்த் மீது போக்சோ வழக்கு பதிவு செய்தனர் போலீசார்.
News December 6, 2025
வேலூர்: குடும்ப பிரச்சனையால் பெண் விபரீத முடிவு!

கே.வி.குப்பம் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரின் மனைவி மணிமேகலை (50). இவர்களிடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் விரக்தியடைந்த மணிமேகலை, நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த கே.வி.குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மணிமேகலையின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.


